துப்பரவாக்கும் ஒன்றியவாழி
From Wikipedia, the free encyclopedia
துப்பரவாக்கும் ஒன்றியவாழி என்பது இரண்டு வெவ்வேறு இன விலங்குகள் ஒன்றுடன் ஒன்று பகர்வு கொண்டு வாழும் கட்டமைப்பில் ஒரு விலங்கு துப்பரவாக்கியாக மற்றைய விலங்கின் உடலில் காணப்படும் ஒட்டுண்ணிகள் முதலானவற்றை அகற்றி அதை தமது உணவாகக் கொள்ளுவதாகும்.
துப்பரவாக்கும் இயல்வு பற்றி முதன்முதலில் கிரேக்க வரலாற்றாசிரியரான எரோடோட்டசு கி.மு 420 இல் பறவைகள் முதலையின் வாயை சுத்தப்படுத்தும் எடுத்துக் காட்டின் மூலம் விளக்கினார்.
துப்பரவாக்கும் ஒன்றியவாழியின் அவசியம் பற்றி உயிரியலாளர்கள் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக வாதித்து வந்துள்ளனர். தூய்மைப்படுத்தல் தனியே ஒரு தன்னலமற்ற செயற்பாடாக தூய ஒன்றுக்கொன்று துணையாகும் தன்மையாக காணப்படுவதாக சிலர் கருதுவர். ஆயினும் ரொபேர்ட் ரைவேர்ஸ் முதலானோர் ஒன்றுக்கொன்று தங்களுக்கிடையே இருசாரரும் நன்மை பெறும் நடவடிக்கை தான் எனக் கருதுவர். இதே வேளை மற்றொரு சாரார் இதனை ஒரு வழியான ஒட்டுண்ணி உறவாகக் கருதுவர்.