தீபாங்கொர்ன் ராஸ்மிஜோதி
From Wikipedia, the free encyclopedia
இளவரசர் தீபாங்கொர்ன் ராஸ்மிஜோதி சிரிவிபுல்ய ராஜகுமார் (பிறப்பு 2005 ஏப்ரல் 29; Prince Dipangkorn Rasmijoti Sirivibulya rajakumar) தாய்லாந்து நாட்டின் சக்ரி வம்சத்தின் உறுப்பினரும், தாய்லாந்து சிம்மாசனத்தின் வாரிசுமாவார். இவர் வச்சிரலோங்கோன் மன்னரின் ஐந்தாவது மகனும், ஏழாவது இளைய குழந்தையாவார். இவரது தாயார் சிறீராஸ்மி சுவாதி, மன்னரின் மூன்றாவது சட்டப்பூர்வ மனைவியாவார். இவரது தந்தைக்கு முதல் மனைவி மூலம் பஜ்ரகிட்டியபா என்ற ஒரு மகளும், இரண்டாவது மனைவி மூலம் ஐந்து குழந்தைகளும் (நான்கு மகன்கள் மற்றும் ஒரு மகள்) உள்ளனர். இரண்டாவது மனைவியின் அனைத்து குழந்தைகளும் அப்போதைய மகுட இளவரசர் தங்கள் தாயை திருமணம் செய்வதற்கு முன்பு பிறந்தவர்கள். ஆனால் அவர்களது திருமணத்தால் சட்டபூர்வமானவர்கள். பட்டத்து இளவரசர் தனது இரண்டாவது மனைவியை 1996 இல் விவாகரத்து செய்த பிறகு, அவர் தனது நான்கு மகன்களையும் மறுத்துவிட்டார். இவர் மட்டுமே மன்னரின் அங்கீகரிக்கப்பட்ட மகனாவார். [1]
தீபாங்கொர்ன் ராஸ்மிஜோதி | |
---|---|
தாய்லாந்தின் இளவரசர் | |
2019இல் தாய்லாந்தின் இளவரசர் | |
பிறப்பு | 29 ஏப்ரல் 2005 (2005-04-29) (அகவை 19) சிறீராஜ் மருத்துவமனை, பேங்காக், தாய்லாந்து |
மரபு | மோகிதோல் (சக்ரி வம்சம்) |
தந்தை | மகா வச்சிரலோங்கோன் (பத்தாம் ராமா) |
தாய் | சிறீராஸ்மி சுவாதி |
மதம் | தேரவாத பௌத்தம் |