தீத்து (நூல்)
திருவிவிலிய நூல் / From Wikipedia, the free encyclopedia
தீத்து அல்லது தீத்துக்கு எழுதிய திருமுகம் (Letter [Epistle] to Titus) என்னும் நூல் கிறித்தவ விவிலியத்தின் இரண்டாம் பகுதியாகிய புதிய ஏற்பாட்டில் பதினேழாவதாகவும், தூய பவுலின் திருமுகங்கள் வரிசையில் பன்னிரண்டாவதாகவும் அமைந்துள்ளது. மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் பெயர் Epistole pros Titon (Επιστολή Προς Τίτον) எனவும் இலத்தீன் மொழிபெயர்ப்பில் Epistula ad Titum எனவும் உள்ளது [1].