திருநீற்றுப் புதன்
இயேசு உயிர்த்தெழுதல் விழாவுக்கு முன் கிருத்துவர்கள் கடைப்பிடிக்கும் 46 நாட்கள் உபன்யாசத்தில / From Wikipedia, the free encyclopedia
திருநீற்றுப் புதன் (Ash Wednesday) என்பது சாம்பல் புதன் என்றும், விபூதிப் புதன் என்றும் அழைக்கப்படுவதுண்டு. இது கிறித்தவர்கள் கொண்டாடும் ஒரு விழா ஆகும். நாற்பது நாள் நீடிக்கின்ற தவக் காலத்தின் முதல் நாள் இதுவே [2][3]. திருநீற்றுப் புதனிலிருந்து 46ஆம் நாளாக உயிர்த்தெழுதல் விழா கொண்டாடப்படும். இடையே வருகின்ற ஞாயிற்றுக் கிழமைகளில் தவ முயற்சிகளைக் கடைப்பிடிப்பது வழக்கமல்ல. ஏனென்றால் ஞாயிற்றுக் கிழமை இயேசு உயிர்பெற்றெழுந்த நாள் ஆதலால் மகிழ்ச்சி நாள்; நோன்பு நாளல்ல என்பது கிறித்தவர் கருத்து.
விரைவான உண்மைகள் திருநீற்றுப் புதன், கடைபிடிப்போர் ...
திருநீற்றுப் புதன் | |
---|---|
கடைபிடிப்போர் | பல கிறித்துவ பிறிவுகள் |
வகை | கிறித்தவம் (யூதம் வழி)[1] |
அனுசரிப்புகள் | திருப்பலியின் போது குரு அல்லது திருத்தொண்டர் மக்களின் தலைமீது சாம்பல் பூசுவது வழக்கம் |
நாள் | உயிர்த்த ஞாயிறுக்கு 46 நாட்களுக்கு முன் |
2023 இல் நாள் | பெப்பிரவரி 22 |
2024 இல் நாள் | பெப்பிரவரி 14 |
2025 இல் நாள் | மார்ச்சு 5 |
2026 இல் நாள் | பெப்பிரவரி 18 |
நிகழ்வு | ஆண்டுதோரும் |
தொடர்புடையன | தவக் காலம் உயிர்த்த ஞாயிறு |
மூடு
திருநீற்றுப் புதனைக் கத்தோலிக்கர், லூத்தரன் சபையினர், ஆங்கிலிக்க சபையினர், மெதடிஸ்டு சபையினர் போன்ற மைய நீரோட்ட சபையினர் அனைவரும் கடைப்பிடிக்கின்றனர்.