திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில் / From Wikipedia, the free encyclopedia
திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில் (Tirunageswaram Naganathar Temple) தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருநாகேஸ்வரம் எனும் ஊரில் அமைந்துள்ளது. சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவராலும் பாடப் பெற்ற சிவாலயமாகும். இதனால் பாடல் பெற்ற தலம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. தேவாரப்பாடல் பெற்ற சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 29ஆவது சிவத்தலமாகும்.
விரைவான உண்மைகள் தேவாரம் பாடல் பெற்ற திருநாகேச்சரம் நாகநாதசுவாமி திருக்கோயில், பெயர் ...
தேவாரம் பாடல் பெற்ற திருநாகேச்சரம் நாகநாதசுவாமி திருக்கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | சண்பக வனம், கிரிகன்னிகை வனம் |
பெயர்: | திருநாகேச்சரம் நாகநாதசுவாமி திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருநாகேஸ்வரம் |
மாவட்டம்: | தஞ்சாவூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | நாகேசுவரர், நாகநாதர், சண்பகாரண்யேசுவரர் |
தாயார்: | 1. பிறையணிநுதலாள் 2. கிரிகுஜாம்பிகை |
தல விருட்சம்: | சண்பகம் |
தீர்த்தம்: | சூரிய தீர்த்தம் உட்பட பன்னிரு தீர்த்தங்கள் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் |
வரலாறு | |
அமைத்தவர்: | சோழர்கள் |
மூடு