திபெத் (1912–1951)
1912-1951 இல் ஆசியவில் இருந்த நாடு / From Wikipedia, the free encyclopedia
திபெத் (1912 - 1951) குயிங் ஆட்சியில் திபெத் 1720 முதல் 1912 முடிய இருந்தது. 1912-இல் சிங்காய் கிளர்ச்சிகளுக்குப் பின்னர் சீனாவின் குயிங் வம்ச வீழ்ச்சியடைந்தது. பிறகு 1912 முதல் 1948 வரை சீனக் குடியரசின் தேசியாத அரசால் பாதுகாக்கப்பட்டப் பகுதியாக இருந்தது. 1951 முதல் சீனா மக்கள் குடியரசில் தன்னாட்சி பகுதியாக திபெத் திபெத் இருந்து வருகிறது.
1912–1951 | |||||||||||
நாட்டுப்பண்: திபெத்தின் தேசிய கீதம் | |||||||||||
நிலை | அங்கீகாரம் பெறாத திபெத்திய அரசு (de facto) சீனக் குடியரசின் பிரதேச அரசு (1912–49) (de jure) | ||||||||||
தலைநகரம் | லாசா | ||||||||||
பெரிய நகர் | தலைநகரம் | ||||||||||
ஆட்சி மொழி(கள்) | திபெத்திய மொழி | ||||||||||
சமயம் | திபெத்திய பௌத்தம் | ||||||||||
மக்கள் | திபெத்தியர் | ||||||||||
அரசாங்கம் | பௌத்த ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா [2] முடியாட்சி[3] | ||||||||||
தலாய் லாமா | |||||||||||
• 1912–1933 (முதல்) | 13-வது தலாய் லாமா, துப்டென் கியாத்சோ | ||||||||||
• 1937–1951 (இறுதி) | 14-வது தலாய் லாமா டென்சின் கியாத்சோ | ||||||||||
வரலாற்று சகாப்தம் | 20-ஆம் நூற்றான்டு | ||||||||||
• சீனா - திபெத் இடையே உண்டான மூன்று அம்ச[4] பிரகடனம் (Proclamation) | சூலை 1912 | ||||||||||
• 13-வது தலாய் லாமா திபெத்திற்கு திரும்புதல் | 1913 | ||||||||||
• திபெத் சீனக் குடியரசின் பிரதேசமாதல்[5] | 1928 | ||||||||||
• சீன தேசிய அரசு தைவானுக்கு புலம் பெயர்தல் | 7 டிசம்பர் 1949 | ||||||||||
• சாம்டோ போர் | 1950 | ||||||||||
• 17 அம்ச உடன்படிக்கையின் படி, திபெத், சீனாவின் இறையான்மையை ஏற்றல் | 23 மே 1951 | ||||||||||
பரப்பு | |||||||||||
• மொத்தம் | 1,221,600 km2 (471,700 sq mi) | ||||||||||
மக்கள் தொகை | |||||||||||
• 1945 | 1,000,000[6] | ||||||||||
நாணயம் | திபெத்திய சகர், சிராங், டங்கா | ||||||||||
| |||||||||||
தற்போதைய பகுதிகள் | சீனா ∟ திபெத் தன்னாட்சிப் பகுதி |
1931 மற்றும் 1946களில் திபெத்திய அரசு, திபெத்தின் நிலை குறித்து, சீனா தேசியவாத அரசுடன் பேச்சு வார்த்தை நடத்த குழுக்களை பெய்ஜிங்க்கு அனுப்பியது. ஆனால் பேச்சு வார்த்தையில் பலனின்றி வெறுங்கையுடன் திபெத்தியக் குழு திரும்பியது. 1933- இல் திபெத்தின் ஆன்மீக மற்றும் அரசுத் தலைவர் தலாய் லாமா மறைந்தார். சீனாவின் குவோமின்டாங் கட்சியின் சீன தேசியவாதக் கட்சி தலாய் லாமா மறைவுக்கு ஆறுதல் கூறவும், திபெத்தின் நிலைகுறித்தும் பேச்சு வார்த்தை நடத்தவும் திபெத்திற்கு ஒரு குழுவை அனுப்பியது. இப்பேச்சு வார்த்தையில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை.
1948-இல் நடைபெற்ற சீனா உள்நாட்டுப் போரில், மா சே துங் தலைமையிலான சீன பொதுவுடமைக் கட்சியின் மக்கள் விடுதலைப் படைகள் சீன தேசியவாத அரசை சீனாவிலிருந்து தூக்கி எறிந்தது. 1950-இல் மக்கள் விடுதலைப் படைகள் திபெத்தில் நுழைந்தது. 17 அம்ச திட்டத்தின் படி, திபெத் சீனாவின் இறையான்மையை ஏற்றுக்கொண்டது.