தாரா சிலை
பௌத்த சமயத்தின், இலங்கையைச் சேர்ந்த தாரா சிலை / From Wikipedia, the free encyclopedia
தாரா சிலை என்பது இலங்கையின் 7- 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தங்க முலாம் பூசப்பட்ட ஒரு வெண்கலச் சிலையாகும். இது பௌத்த சமய பெண் தெய்வமான தாராவின் சிலையாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரித்தானியர் கண்டியின் கடைசி மன்னரை வென்று கண்டி இராச்சியத்தை கைப்பற்றினர். அப்போது இலங்கையின் பிரித்தானியத் தேசாதிபதியாக இருந்தவர் ராபர்ட் பிரௌன்ரிக் என்பவர். இவரது பதவிக்காலம் முடிந்து இவர் பிரிட்டன் சென்றபோது தன்னுடன் இந்தச் சிலையையும் கொண்டு சென்றார். பின்னர் இச்சிலையை இவர் 1830 இல் பிரித்தானிய அருங்காட்சியகத்துக்கு வழங்கினார். [1]
விரைவான உண்மைகள் செய்பொருள், அளவு ...
செய்பொருள் | வெண்கலம் |
---|---|
அளவு | 143 செமீ உயரம் |
உருவாக்கம் | கி. பி. 7வது-8வது நூற்றாண்டு |
தற்போதைய இடம் | இலண்டன், பிரித்தானிய அருங்காட்சியகம் |
அடையாளம் | 1830,0612.4 |
மூடு