தவமணி ஜெகஜோதிவேல் பாண்டியன்
From Wikipedia, the free encyclopedia
தவமணி ஜெகஜோதிவேல் பாண்டியன் (Thavamani Jegajothivel Pandian)(பிறப்பு 15 ஜூன் 1939) என்பவர் இந்திய மரபியலாளர் மற்றும் சூழலியல் நிபுணர் ஆவார். இவர் உயிரியக்கவியல் மற்றும் விலங்கு சூழலியல் ஆகியவற்றில் முன்னோடி ஆய்வுகளுக்குப் பெயர் பெற்றவர்.[1] வேர்ல்ட்ஃபிஷ் நாகா விருதைப் பெற்ற இவர், இந்திய அரசாங்கத்தின் பயோடெக்னாலஜி துறையின் அக்வா மற்றும் மரைன் உயிரிதொழில்நுட்பக்குழு தொடர்பான பணிக்குழு குழுவின் முன்னாள் தலைவராக உள்ளார்.[2] முன்னாள் தலைவர், உலக அறிவியல் அகாடமியின் உறுப்பினரும் மற்றும் இந்தியத் தேசிய அறிவியல் கழகம், தேசிய அறிவியல் கழகம், இந்தியா, இந்திய அறிவியல் கழகம் மற்றும் தேசிய வேளாண் அறிவியல் கழகம் ஆகியவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக உள்ளார்.[3] அறிவியல் ஆராய்ச்சிக்காக இந்திய அரசின் உச்ச நிறுவனமான அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி ஆய்வு மன்றம், இவரின் உயிரியல் அறிவியலுக்கான பங்களிப்புகளுக்காக 1984ஆம் ஆண்டில், இந்திய அறிவியல் விருதுகளில் உயரிய விருதான சாந்தி ஸ்வரூப் பட்நகர் விருதினை இவருக்கு வழங்கியது.[4]
தவமணி ஜெகஜோதிவேல் பாண்டியன் Thavamani Jegajothivel Pandian | |
---|---|
பிறப்பு | 15 சூன் 1939 (1939-06-15) (அகவை 84) பாலமேடு, மதுரை மாவட்டம், தமிழ் நாடு, இந்தியா |
வாழிடம் | மதுரை, தமிழ் நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
துறை |
|
பணியிடங்கள் |
|
கல்வி கற்ற இடங்கள் |
|
அறியப்படுவது | மீன்களில் பால் தீர்மானைத்தல், பாலின வேறுபாடு |
விருதுகள் | 1978 இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் ஹீக்கர் விருது 1984 சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது 1985 ஈசிஐ பரிசு 1991 வார்ல்ட்பிஷ் நாக விருது 1994 பால் நினைவு தங்கப் பதக்கம் 1997 தமிழ்நாடு அறிவியலார் விருது |
தவமணி ஜெகஜோதிவேல் பாண்டியன், தென் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரமான பாலமேடு என்ற இடத்தில் 1929ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதி பிறந்தார். இவரது பெற்றோர் குமாரசாமி தவமணி மற்றும் வள்ளியம்மாள் ஆவர்.1960இல் மதுரை தியாகராஜர் கல்லூரியில் இளம் அறிவியல் பட்டம் பெற்ற இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் முது அறிவியல் பட்டம் 1962ஆம் ஆண்டு பெற்றார். இந்த இரு கல்லூரிகளும் சென்னை பல்கலைக்கழகத்தின் இணைவுப் பெற்ற கல்லூரிகளாகும். சென்னைப் பல்கலைக்கழகத்திலிருந்து 1965இல் முனைவர் பட்டம் (பிஎச்டி) பெற்றார்.[5] இவரது முனைவர் பட்ட மேலாய்வுகள் ஜெர்மனியின் ஹெல்கோலாண்டில் உள்ள பிலோகிஷே அன்ஸ்டால்ட்டில் இருந்தன. மேலும் இவர் 1968இல் கீல் பல்கலைக்கழகத்தில் இயற்கை அறிவியல் மருத்துவர் (டாக்டர். ரெட். நாட்.) பட்டம் பெற்றார். இந்தியாவுக்குத் திரும்பிய பின், 1968இல் பெங்களூர்ப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகத் தனது கல்வி வாழ்க்கையைத் தொடங்கினார், 1971இல் தனது சொந்த ஊருக்குச் சென்று மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் கல்விப்பணியில் சேர்ந்தார். இங்கு இவர் பல பணிகளை வகித்து ஒய்வுபெறும் வரை பணியாற்றினார். பேராசிரியராக 1976 முதல் 1992 வரையிலும் மற்றும் ஒரு மூத்த பேராசிரியராக 1994 முதல் 1995 வரையிலும் பணியாற்றினார்.[6] இடையில், ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் 1973ஆம் ஆண்டு வருகை விஞ்ஞானியாகவும், கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் தென் கரோலினா பல்கலைக்கழகத்தில் 1981 முதல் 1982 வரை வருகை பேராசிரியராகவும், கியோட்டோ பல்கலைக்கழகத்தில் 1989ஆம் ஆண்டு வெளிநாட்டு கூட்டாளராகவும், யுனெஸ்கோ விரிவுரையாளராகவும் பணியாற்றினார். காண்ட் பல்கலைக்கழகம் 2003 முதல் 2004 வரையும் பணியாற்றினார். வயது முதிர்வு ஓய்விற்குப்பின் தேசிய பேராசிரியர் பதவியை இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் சார்பில் 1996 முதல் 2002 வரையும், முது விஞ்ஞானி பொறுப்பினை அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் சார்பில் 2002 முதல் 2005 வரையும் இந்திய தேசிய அறிவியல் கழக விஞ்ஞானி பொறுப்பினை 2005 முதல் 2009 வரை வரை வகித்தார்.குறிப்பு 1] உயிரி தொழில்நுட்பவியல் துறையின் நீர் மற்றும் பெருங்கடல் உயிரி தொழில்நுட்பவியல் தொடர்பான பணிக்குழுவுக் தலைமை தாங்கினார் [2] மற்றும் ஜெர்மனியின் சூழலியல் நிறுவனம், 1985 முதல் வருகை தரும் விஞ்ஞானியாகவும், எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையுடன் 1996 முதல் வருகை பேராசிரியராகவும் இணைந்துள்ளார். 1990ஆம் ஆண்டில் இந்திய தேசிய அறிவியல் கழகம் மற்றும் 1998 முதல் 2000 வரை தேசிய வேளாண் அறிவியல் கழகத்திலும் பணியாற்றினார்.
பாண்டியன், முத்து சாந்தகுமாரியை மணந்தார். இந்த இத்தம்பதியரின் மகன், சதீஷ் கின்னே பாண்டியன் சிறுநீரக மருத்துவர்.[7] இவர்களது குடும்பம் மதுரையில் வசிக்கிறது.[5]