தனக்பூர்
From Wikipedia, the free encyclopedia
தனக்பூர் (Tanakpur) வட இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் குமாவுன் கோட்டத்தில் அமைந்த சம்பாவத் மாவட்டத்தில் சாரதா ஆற்றின் கரையில் அமைந்த நகரம் ஆகும். இந்நகரம் இந்திய-நேபாள எல்லையில் அமைந்துள்ளது. தில்லி-பஞ்சாப் நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 9 தனக்பூர் வழியாகச் செல்கிறது.
விரைவான உண்மைகள் தனக்பூர், நாடு ...
தனக்பூர் | |
---|---|
நகரம் | |
இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் சம்பாவத் மாவட்டத்தில் தனக்பூர் நகரத்தின் அமைவிடம் Show map of உத்தராகண்டம் | |
ஆள்கூறுகள்: 29.074°N 80.109°E / 29.074; 80.109 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தராகண்ட் |
மாவட்டம் | சம்பாவத் |
நிறுவிய ஆண்டு | 1880 |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | தனக்பூர் நகராட்சி மன்றம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 111.2 km2 (42.9 sq mi) |
ஏற்றம் | 255 m (837 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 2,00,000 |
• அடர்த்தி | 1,800/km2 (4,700/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | இந்தி, குமாவனி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 262309 |
தொலைபேசி குறியீடு | 05943 |
வாகனப் பதிவு | UK 03 |
இணையதளம் | uk |
மூடு
கயிலை மலை-மானசரோவர் புனித யாத்திரை மேற்கொள்பவர்கள் தனக்பூரிலிருந்து, தார்ச்சுலா-லிபுலேக் சாலை வழியாக செல்வது எளிதாகிறது. இந்நகரம் இமயமலையில் 255 மீட்டர் உயரத்தில் உள்ளது.