டேச்சு அரசியல் கைதிகள் முகாம்
From Wikipedia, the free encyclopedia
டேச்சு கைதிகள் சிறைச்சாலை (Dachau Concentraion Camp) என்பது நாசி ஜெர்மனியின் கைதிகள் சிறைச்சாலையைக் குறிக்கும். அரசியல் கைதிகளையும் கம்யூனிஸ்டுகளையும் போர்க்கைதிகளையும், நாசி எதிர்ப்பாளர்களையும், தேசத்துரோகம் புரிபவர்களையும், அரசியல் பத்திரிகையாளர்களையும் அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்தும் இடமாக 29 ஏப்ரல், 1935 வரை செயல்பட்டது. இது ஜெர்மனியின் பவேரியா மாநிலத்திலுள்ள முனிச்சுக்கு அருகாமையிலுள்ள டேச்சு என்னும் ஊரில் அமைந்துள்ளது. மார்ச் 1933 ல் ஹைன்ரிச் ஹிம்லர் ஆட்சியின் போது இது திறக்கப்பட்டது. ஆரம்பத்தில் இது சாதரண சிறைச்சாலையாகத்தான் தொடங்கப்பட்டது. 1933 ஜூலை 6 ஆட்சி கலைந்தபின் இட்லரின் ஆளுமையில் இதன் செயல்பாடுகள் மாற்றப்பட்டன. இது அரசியல் கைதிகளின் சிறைச்சாலையாக அறிவிக்கப்பட்டது. டேச்சு சிறைச்சாலைக்குப்பிறகு இந்த பின்பற்றல் நடைமுறை அனைத்து நாசிச் சிறைச்சாலைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டன.