டி. பி. ராய் சௌத்தரி
இந்திய ஓவியர், சிற்பி / From Wikipedia, the free encyclopedia
தேவி பிரசாத் ராய் சௌத்தரி (Devi Prasad Roy Choudhury) (1899-1975) என்பவர் ஓர் இந்திய சிற்பி, ஓவியர் மற்றும் லலித் கலா அகாதமியின் நிறுவனர் தலைவர் ஆவார். [1] இவர் உழைப்பாளர் சிலை மற்றும் தியாகிகள் நினைவு சிலை உள்ளிட்ட வெண்கல சிற்பங்களுக்காக அறியப்பட்டு, நவீன இந்திய கலைஞர்களில் ஒருவராக பலரால் மதிப்பிடப்படுகிறார். [2] இவர் 1962 இல் லலித் கலா அகாதமிக்கான பெல்லோவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கலைக்கு இவர் செய்த பங்களிப்புகளுக்காக 1958 ஆம் ஆண்டில் இந்தியாவின் மூன்றாவது பெரிய விருதான பத்ம பூசண் விருதை இந்திய அரசு அவருக்கு வழங்கியது. [3]
விரைவான உண்மைகள் டி. பி. ராய் சௌத்தரி, பிறப்பு ...
டி. பி. ராய் சௌத்தரி | |
---|---|
பிறப்பு | (1899-06-15)15 சூன் 1899 பிரித்தானிய இந்தியா, மீர்பூர் மாவட்டம், தேஜாட் |
இறப்பு | 15 அக்டோபர் 1975(1975-10-15) (அகவை 76) |
பணி | ஓவியர் sculptor |
அறியப்படுவது | வெண்கல சிற்பங்கள் உழைப்பாளர் சிலை தியாகிகள் நினைவு சிலை, பாட்னா |
வாழ்க்கைத் துணை | டோலி |
விருதுகள் | பத்ம பூசண் Member of the Order of the British Empire (MBE) லலித் கலா அகாதமி ரத்னா |
மூடு