ஜொகூர் சுல்தான்
From Wikipedia, the free encyclopedia
ஜொகூர் சுல்தான் (ஆங்கிலம்: Sultan of Johor; மலாய்: Sultan Johor; சீனம்: 柔佛苏丹; ஜாவி: سلطان جوهر) என்பவர் ஜொகூர் மாநிலத்தின் ஆளும் அரசராகவும், மாநிலத்தின் தலைவராகவும், இசுலாமிய மதத்தின் தலைவராகவும் சேவை செய்யும் தலைமை அரச ஆளுநராகும். அந்த வகையில், ஜொகூர் மாநிலத்தின் அரசியலமைப்புத் தலைவர் சுல்தான் ஆவார்.
விரைவான உண்மைகள் ஜொகூர் சுல்தான் Sultan of Johor Sultan Johor Darul Takzim, ஆட்சிக்காலம் ...
ஜொகூர் சுல்தான் Sultan of Johor Sultan Johor Darul Takzim | |
---|---|
ஆட்சிக்காலம் | ஜொகூர் சுல்தான் பதவியில்: (2010 – இன்று வரையில்) |
முடிசூட்டுதல் | 23 மார்ச் 2015 |
முன்னையவர் | ஜொகூர் சுல்தான் இசுகந்தர் |
பின்னையவர் | ஜொகூர் சுல்தான் இசுமாயில் இட்ரிஸ் |
பிறப்பு | 22 நவம்பர்1958 |
மரபு | தெமாங்கோங் |
தந்தை | ஜொகூர் சுல்தான் இசுகந்தர் |
தாய் | யோசபீன் ரூபி திரெவொரோ |
மூடு
முன்னர் காலத்தில், ஜொகூர் சுல்தான் தன் மாநிலத்தின் மீது முழுமையான அதிகாரத்தைக் கொண்டிருந்தார்; மற்றும் ஒரு பெண்டகாராவால் அறிவுரை வழங்கப்பட்டார். தற்போது, பெண்டகாராவின் பதவி, மந்திரி பெசார் (Menteri Besar) எனும் மாநில முதல்வரால்; ஜொகூர் மாநில முடியாட்சி அரசியலமைப்பின் வழி ஏற்கப்பட்டுள்ளது. ஜொகூர் சுல்தானுக்கு ஜொகூர் அரச இராணுவப் படை எனும் சொந்த இராணுவப் படையும் (Royal Johor Military Force) உள்ளது.[1]