ஜேன் ஆடம்ஸ்
From Wikipedia, the free encyclopedia
ஜேன் ஆடம்சு (Jane Addams, செப்டம்பர் 6, 1860 – மே 21, 1935)[1] அமெரிக்க முன்னோடி குடியிருப்பு சமூகப் பணியாளரும் பொது மெய்யியலாளரும் சமூகவியலாளரும் எழுத்தாளரும் ஆவார். இவர் பெண்கள் வாக்குரிமைக்காகவும் உலக அமைதிக்காகவும் போராடிய தலைவர். 1880களில் புகழ்பெற்றிருந்த குடியிருப்பு இயக்கத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த ஜேன் எல்லன் கேட்சு இசுடாருடன் இணைந்து ஹல் மாளிகை என்ற குடியிருப்பைத் தோற்றுவித்தார். ஏழைகளின் குடியிருப்பில் நடுத்தர மக்கள் குடியேறி இவர்களுடன் அறிவையும் பண்பாட்டையும் பகிரும் இயக்கமே குடியிருப்பு இயக்கமாகும். சிகாகோவின் ஏழை மக்கள் மற்றும் வந்தேறிகள் எதிர்கொண்ட பிரச்சினைகளைத் தீர்க்க பெருமுயற்சி மேற்கொண்டார். வந்தேறிகளுக்கும் பெண்களுக்கும் அமைதியும் கூடுதல் உரிமைகளும் பெற்றுத் தர பாடுபட்டார். 1931ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது[2]. இந்தப் பரிசை வென்ற முதல் அமெரிக்கப் பெண்மணி இவரேயாவார். இவர் பெண் விழைவோராக இருந்தார்.[3] 1935ஆம் ஆண்டு சிகாகோவில் காலமானார்.
ஜேன் ஆடம்சு | |
---|---|
பிறப்பு | (1860-09-06)செப்டம்பர் 6, 1860 செடர்வில், இலினொய், ஐ.அ. |
இறப்பு | மே 21, 1935(1935-05-21) (அகவை 74) சிகாகோ, இலினொய், ஐ.அ. |
பணி | சமூக, அரசியல் செயற்பாட்டாளர், எழுத்தாளர், விரிவுரையாளர், சமூக அமைப்பாளர், பொது அறிவுசீவி |
பெற்றோர் | ஜான் எச். ஆடம்சு சாரா வெபர் (ஆடம்சு) |
விருதுகள் | அமைதிக்கான நோபல் பரிசு (1931) |
கையொப்பம் |