ஜெயப்பிரகாஷ் மல்லா
From Wikipedia, the free encyclopedia
ஜெயப்பிரகாஷ் மல்லா (Jaya Prakash Malla) (நேபாளி: जयप्रकाश मल्ल) (இறப்பு: 1768) காத்மாண்டு சமவெளியில் அமைந்த காட்மாண்டு நாட்டை 1736 - 1746 மற்றும் 1750 - 1768 ஆகிய காலகட்டங்களில் ஆண்ட மல்ல வம்சத்தின் இறுதி மன்னர் ஆவார். மல்லர் வம்சத்தினர் நேவார் மக்கள் ஆவார்.
விரைவான உண்மைகள் ஜெயப்பிரகாஷ் மல்லா, பிறப்பு ...
ஜெயப்பிரகாஷ் மல்லா | |
---|---|
காட்மாண்டு மன்னர் | |
பிறப்பு | காட்மாண்டு, நேபாளம் |
இறப்பு | 1768 பசுபதிநாத் |
மரபு | மல்லர் வம்சம் |
தொழில் | காட்மாண்டு மன்னர் |
மூடு
கூர்க்காலிகளின், ஷா வம்ச மன்னரான பிரிதிவி நாராயணன் ஷா, கிபி 1768ல் காட்மாண்டுப் போரில் காத்மாண்டு இராச்சியத்தின் இறுதி மன்னர் ஜெயப்பிரகாஷ் மல்லாவை வீழ்த்தி, ஒன்றுப்பட்ட நேபாள இராச்சியத்தை நிறுவினார்.
மன்னர் ஜெயப்பிரகாஷ் மல்லா, பத்ம சமூச்சயம் மற்றும் மூன்று நாடகங்களை இயற்றி நேபால் பாஷாவிற்கு புகழ் சேர்த்தவர்.[1]