ஜான் வியான்னி
From Wikipedia, the free encyclopedia
புனித ஜான் பாப்டிஸ்ட் மரிய வியான்னி (Saint John Baptist Mary Vianney, மே 8 1786 - ஆகஸ்ட் 4 1859) பிரான்சு நாட்டில் உள்ள ஆர்ஸ் எனும் சிற்றூரின் பங்கு குருவாய் இருந்தவர். பிரெஞ்சுப் புரட்சியின் காரணமாக விசுவாசமும் இறை நம்பிக்கையும் குறைந்து போய் இருந்த அப்பங்கு, இவரின் கடின உழைப்பால் மனம் மாறியது என்பர். மரியன்னை மீதும் நற்கருணை மீதும் மிகுந்த பக்தி கொண்டிருந்த இவர், ஒப்புரவு அருட்சாதனத்தில் மிகுந்த நேரத்தை செலவிட்டார். இவர் கத்தோலிக்க குருக்களின் பாதுகாவலர் ஆவார்.
விரைவான உண்மைகள் புனித ஜான் மரிய வியான்னி Saint John Baptist Mary Vianney, மறைப்பணியாளர் ...
புனித ஜான் மரிய வியான்னி Saint John Baptist Mary Vianney | |
---|---|
புனித ஜான் பாப்டிஸ்ட் மரிய வியான்னி | |
மறைப்பணியாளர் | |
பிறப்பு | (1786-05-08)மே 8, 1786 டார்டில்லி, பிரான்சு |
இறப்பு | ஆகத்து 4, 1859(1859-08-04) (அகவை 73) ஆர்ஸ்-சுர்-பார்மன்ஸ், பிரான்சு |
ஏற்கும் சபை/சமயங்கள் | கத்தோலிக்கம், ஆங்கிலிக்கம் |
அருளாளர் பட்டம் | ஜனவரி 8, 1905, ரோம் by திருத்தந்தை 10ம் பயஸ் |
புனிதர் பட்டம் | 1925, ரோம் by திருத்தந்தை 11ம் பயஸ் |
முக்கிய திருத்தலங்கள் | புனித ஜான் மரிய வியான்னி திருத்தலம்; ஆர்ஸ்-சுர்-பார்மன்ஸ், பிரான்சு |
திருவிழா | ஆகஸ்ட் 8 |
பாதுகாவல் | குருக்கள், பங்கு குருக்கள் |
மூடு