ஜான்பூர் சுல்தானகம்
From Wikipedia, the free encyclopedia
ஜான்பூர் சுல்தானகம் (Jaunpur Sultanate ) என்பது 1394 மற்றும் 1479 க்கு இடையில் வட இந்தியாவில் ஆட்சி செய்த பாரசீக முஸ்லிம் இராச்சியம் ஆகும்.. இது ஷார்கி வம்சத்தால் ஆளப்பட்டது. இது தில்லி சுல்தானகத்தின் துக்ளக் வம்சத்தின் சிதைவுக்கு மத்தியில், சுல்தான் நான்காம் நசிருதீன் முகமது ஷா துக்ளக்கின் ஒரு அண்ணிய அடிமையும் முன்னாள் ஆளுநருமான குவாஜா-இ-ஜஹான் மாலிக் சர்வார் என்பவரால் 1394 இல் நிறுவப்பட்டது. ஜான்பூரை மையமாகக் கொண்டு, சுல்தானகம் அவத் மற்றும் கங்கை - யமுனை தோவாபின் பெரும் பகுதியின் மீது அதிகாரத்தை நீட்டித்தது. சுல்தான் இப்ராகிம் ஷாவின் ஆட்சியின் கீழ் இது அதன் மிகப்பெரிய உச்சத்தை எட்டியது. அவர் சுல்தானகத்தில் இசுலாமிய கல்வியின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்களித்தார். 1479 ஆம் ஆண்டில், தில்லி சுல்தானகத்தின் லௌதி வம்சத்தின் சுல்தானான ஆப்கானிய ஆட்சியாளர் பக்லுல் லௌதியின் படைகளால் சுல்தான் உசேன் கான் தோற்கடிக்கப்பட்டார். இது சுதந்திரமாக இருந்த ஜான்பூர் தில்லி சுல்தானகத்திற்குள் மீண்டும் உள்வாங்கப்பட்டது.
ஜான்பூர் சுல்தானகம் (ஷார்கி வம்சம்) سلطنت جونپور | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
1394–1479 | |||||||||
தலைநகரம் | ஜான்பூர் | ||||||||
பேசப்படும் மொழிகள் | பாரசீக மொழி (அலுவல்) உருது (பொது) அரபு மொழி (மதம்) | ||||||||
சமயம் | சுன்னி இசுலாம் | ||||||||
அரசாங்கம் | சுல்தான்-முடியாட்சி | ||||||||
சுல்தான் | |||||||||
• 1394–1399 | மாலிக் சர்வார் (முதல்) | ||||||||
• 1458–1479 | உசேன் கான் (கடைசி) | ||||||||
வரலாறு | |||||||||
• தொடக்கம் | 1394 | ||||||||
• முடிவு | 1479 | ||||||||
| |||||||||
தற்போதைய பகுதிகள் | இந்தியா |