சோமவம்சி வம்சம்
ஒடிசாவை ஆண்ட பண்டைய வம்சம் / From Wikipedia, the free encyclopedia
சோமவம்சி வம்சம் ( Somavamshi dynasty) அல்லது கேசரி வம்சம் என்பது பொ.ச. 9 - 12 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் கிழக்கிந்தியாவில் இன்றைய ஒடிசாவின் சில பகுதிகளை ஆண்ட வம்சமாகும். யயாதிநகரம் (நவீன பினிகா), அபினவ-யயாதிநகரம் (நவீன ஜாஜ்பூர்) ஆகியவை அவர்களின் தலைநகரங்களாக இருந்தது.
சோமவம்சி வம்சம் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுமார் 9ஆம் நூற்றாண்டு–சுமார் 12ஆம் நூற்றாண்டு | |||||||||||||
தலைநகரம் | ஜாஜ்பூர் | ||||||||||||
பேசப்படும் மொழிகள் | ஒடியா[1] | ||||||||||||
சமயம் | இந்து சமயம் சைனம் | ||||||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||||
வரலாறு | |||||||||||||
• தொடக்கம் | சுமார் 9ஆம் நூற்றாண்டு | ||||||||||||
• முடிவு | சுமார் 12ஆம் நூற்றாண்டு | ||||||||||||
|
சோமவம்சிகள் மத்திய இந்தியாவில் உள்ள தெற்கு கோசலப் பகுதியை ஆண்ட பாண்டுவம்சிகளுடன் தொடர்புடையவர்களாக இருக்கலாம். இவர்கள் திரிபுரியின் காலச்சூரிகளால் இப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கலாம். அதைத் தொடர்ந்து இவர்கள் தற்போதைய ஒடிசாவில் உள்ள கலிங்க நாடு, உத்கல நாடு போன்ற பகுதிகளை கைப்பற்றி, அங்கு ஆண்டு வந்த பௌமா-கரர்களை மாற்றினர்.
சோமவம்சிகள் ஒடிசாவில் கலை மற்றும் கட்டிடக்கலையின் ஒரு புதிய பாணியை அறிமுகப்படுத்தினர். மேலும் இவர்களின் ஆட்சியில் இப்பகுதி பௌத்த மதத்திலிருந்து பிராமணியத்திற்கு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டது. சோமவம்சிகளின் ஆட்சி 12ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முடிவடைந்தது. கீழைக் கங்க ஆட்சியாளரான அனந்தவர்மன் சோடகங்கன் இவர்களின் பிரதேசங்களைக் கைப்பற்றினான்.