சேம்சு இராம்சே மெக்டொனால்டு
From Wikipedia, the free encyclopedia
சேம்சு இராம்சே மெக்டொனால்டு (Ramsay MacDonald)(12 அக்டோபர் 1866 – 9 நவம்பர் 1937) என்பவர் ஐக்கிய இராச்சியத்தின் முதல் பிரதமராக இருந்தவர். இவர் தொழிற்கட்சியைச் சேர்ந்தவர். சிறுபான்மை தொழிலாளர் அரசாங்கங்களை 1924இல் ஒன்பது மாதங்கள் மற்றும் 1929-1931க்கு இடையில் வழிநடத்தினார். 1931 முதல் 1935 வரை, பிரித்தானியாவின் கன்சர்வேடிவ் கட்சி ஆதிக்கம் செலுத்திய தேசிய அரசாங்கத்திற்கு தலைமை தாங்கினார். மெக்டொனால்டை தொழிலாளர் உறுப்பினர்களில் சிலர் மட்டுமே ஆதரித்ததால், தொழிற்கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
மாண்புமிகு இராம்சே மெக்டொனால்டு | |
---|---|
ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் | |
பதவியில் 5 ஜூன் 1929 – 7 ஜூன் 1935 | |
ஆட்சியாளர் | ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ் |
கையெழுத்து | |
மெக்டொனால்டு, கெய்ர் ஹார்டி மற்றும் ஆர்தர் ஹென்டர்சன் ஆகியோருடன் 1900இல் தொழிற்கட்சியின் மூன்று முக்கிய நிறுவனர்களில் ஒருவராக இருந்தார். இவர் 1914க்கு முன்னர் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைவராக இருந்தார். முதல் உலகப் போருக்கு எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக இவரது வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு திருப்பத்திற்குப் பிறகு, இவர் 1922 முதல் தொழிலாளர் கட்சியின் தலைவராக இருந்தார். இரண்டாவது தொழிலாளர் அரசாங்கம் (1929-1931) பெரும் பொருளியல் வீழ்ச்சியால் ஆதிக்கம் செலுத்தியது. தங்கத் தரத்தை பாதுகாப்பதற்காக செலவுக் குறைப்புகளைச் செய்ய இவர் தேசிய அரசாங்கத்தை அமைத்தார். ஆனால் இன்வர்கார்டன் கலகத்திற்குப் பிறகு இதைக் கைவிட வேண்டியிருந்தது. மேலும் பொருளாதாரத்தை சரிசெய்ய "மருத்துவரின் ஆணையை" கோரி 1931இல் ஒரு பொதுத் தேர்தலை நடத்தினார். தேசிய கூட்டணி பெரும்பான்மையான இடத்தில் வென்றது. தொழிற்கட்சி பொது மன்றத்தில் சுமார் 50 இடங்களையேப் பெற்றது. இவர் 1935இல் பிரதமரானார். 1937இல் ஓய்வு பெறும் வரை பிரபுக்கள் சபையின் தலைவராக இருந்தார். அந்த ஆண்டின் பிற்பகுதியில் இறந்தார்.