சீலாந்து வேள்புலம்
From Wikipedia, the free encyclopedia
சீலாந்து வேள்புலம் (Principality of Sealand) என்பது எச்எம் ரஃப்சு கோட்டை எனப்படும் இடத்தில் உள்ள ஒரு அங்கீகரிக்கப்படாத பிரதேசம் ஆகும். இது ஐக்கிய இராச்சியம், இங்கிலாந்தின் சஃபோக் கரையில் இருந்து 13 கிமீ தொலைவில் வடகடலில் உள்ள ஒரு முன்னாள் இரண்டாம் உலகப் போர்க்கால மவுன்செல் கடல் துறைகளில் ஒன்றாகும்.[6][8]
சீலாந்து வேள்புலம் Principality of Sealand | |||
நுண் நாடு | |||
| |||
Motto: E Mare Libertas (English: கடலில் இருந்து, விடுதலை) பண்: "E Mare Libertas" by பசில் சிமோனென்கோ | |||
நிலை | தற்போது | ||
---|---|---|---|
கோரப்பட்ட நிலம் | 550 சதுரமீட்டர் (அனைத்தும் வாழக்கூடிய பகுதிகள்)[1] | ||
மக்கள்தொகை | 27 (கோரியது)[1] | ||
நிறுவிய ஆண்டு | 2 செப்டம்பர் 1967[2] | ||
தலைமை | பேட்சு குடும்பம், இளவரசர் மைக்கேல்[3] | ||
ஒழுங்கமைவு | சிலராட்சி, அரசியல்சட்ட முடியாட்சி | ||
மொழி | ஆங்கிலம்[4] | ||
நாணயம் | சீலாந்து டாலர் (அமெரிக்க டாலருடன் நிலைப்படுத்தப்பட்டது)[5] | ||
நாணயக் குறியீடு | எதுவுமில்லை | ||
தலைநகர் | எச்எம் ரஃப்சு துறை[6] | ||
Demonym | சீலாண்டர், சீலாண்டிக்கு[1] | ||
Claimed GDP | US$600,000 (US$22,200 நபர்வரி)[2] | ||
நேரவலயம் | கிஇநே[7] |
1967 முதல் பாடி ரோய் பேட்சு என்பவராலும், அவரது குடும்பத்தினராலும் இப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு சுதந்திரத் தனிநாடாகக் கோரப்பட்டது.[6] பேட்சு 1967 ஆம் ஆண்டில் தனது தனிப்பட்ட வானொலி நிலையம் ஒன்றை நிறுவும் நோக்கோடு கடற்கொள்ளைக்கார வானொலி ஒலிபரப்பாளர்களிடம் இருந்து கைப்பற்றினார். 1975 ஆம் ஆண்டில் இவர் சீலாந்து என்ற பெயரில் அரசு ஒன்றை நிறுவி அரசியலமைப்புச் சட்டம், மற்றும் பல தேசிய சின்னங்களையும் அமைத்தார்.[6] பேட்சு முதுமை அடைந்த நிலையில், ஆட்சிப் பொறுப்பைத் தனது மகன் மைக்கேலிடம் கொடுத்துவிட்டு இங்கிலாந்தின் எசெக்சு நகருக்குத் திரும்பினார். பேடு 2012 ஆம் ஆண்டில் தனது 91வது அகவையில் மரணமானார்.[9]
சீலாந்து உலகின் மிகச் சிறிய நாடாக,[10] அல்லது நுண் நாடாகக் கருதப்பட்டாலும்,[11] இது எந்தவொரு சுதந்திர நாடாலும் இதுவரையில் அங்கீகரிக்கப்படவில்லை. அப்போது வழக்கில் இருந்த பிராந்திய கடல் எல்லைக் கட்டுப்பாட்டின் படி, இப்பிரதேசத்தின் மீது உரிமை கோர இங்கிலாந்துக்கு அதிகாரம் இல்லை என இங்கிலாந்தின் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால், ஐக்கிய இராச்சியம், மற்றும் செருமனி ஆகியன நடைமுறைப்படி தம்மை அங்கீகரித்துள்ளதாக சீலாந்து அரசு கூறி வருகிறது.[6]
கடல் மீது அமைந்துள்ள ஒரு கட்டிடம் தான் இந்நாட்டு மக்களின் வாழிடமாகும். இக்கட்டிடத்தில் 30 அறைகள் உள்ளன. இந்நாட்டினை தற்போது ஆண்டு வரும் மைக்கேல் குடும்பம் உட்பட 50 குடிமக்களே இந்நாட்டில் வசித்து வருகின்றனர்.[12]