சிறுநீர்க் கழிப்பு
From Wikipedia, the free encyclopedia
சிறுநீர்க் கழிப்பு (Urination) என்பது சிறுநீர்ப்பை யிலிருந்து சிறுநீர் வடிகுழாய் மூலம் சிறுநீர் வெளியேறுவதைக் குறிக்கும். இது சிறுநீர்த்தொகுதியின் கழிவு வெளியேற்ற முறை ஆகும். இது மருத்துவ முறையில் சிறுநீர்கழிப்பு, வெளியேற்றம், அல்லது சில நேரங்களில் அரிதாகக் கழிப்பு எனப்படுகிறது, மேலும் பேச்சு வழக்கில் இது ஒன்றுக்குப் போதல், பெய்தல், மூத்திரம் கழித்தல் எனப் பல்வேறு பெயர்களால் அறியப்படுகிறது.
This இக்கட்டுரை தனித்து விடப்பட்டக் கட்டுரை. வேறு எந்தக் கட்டுரையும் இக்கட்டுரையை இணைக்கவில்லை. தொடர்புடைய கட்டுரைகளுடன் இக்கட்டுரையை தயவு செய்து இணைக்கவும்; மற்றக் கட்டுரைகளுடன் இணைப்பதற்காக இணைப்பைத் தேடும் கருவியை பரிந்துரைக்காக பயன்படுத்திப் பாருங்கள். (ஏப்ரல் 2019) |
ஆரோக்கியமான மனிதர்கள் மற்றும் பல விலங்குகளுக்கு சிறுநீர்க் கழித்தல் என்பது தன்னார்வக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. மழலைகள் சில வயது முதிர்ந்தோர், நரம்பியல் ரீதியாகப் பாதிப்பு உள்ளவர்கள் ஆகியோருக்கு சிறுநீர்க்கழித்தல் என்பது ஒரு அனிச்சைச் செயலாக நடைபெறும். வயது முதிர்ந்த மனிதர்கள் நாளொன்றுக்கு ஏழு தடவை சிறுநீர் கழிப்பது வழக்கமானதாகும்.[1]
சில விலங்குகளில், கூடுதலாகக் கழிவுப்பொருட்களை வெளியேற்றுவது அல்லது சிறுநீர் கழித்தல் என்பது அதன் எல்லைகளைத் தீர்மானிப்பதாக இருக்கலாம். அல்லது கீழ்ப்படிதலை வெளிப்படுத்தலாம். அல்லது தனது இணைக்காகவும் இருக்கலாம். உடலியல் ரீதியாக, சிறுநீர்க் கழித்தல் மைய நரம்பு மண்டலம், தன்னியக்க நரம்பு மண்டலம், உடற்காப்பு நரம்பு மண்டலம் ஆகியவற்றினிடையே உள்ள ஒருங்கிணைப்பால் நிகழ்கிறது. பான்டின் சிறுநீர் மையம், பெரிக்யூக்யூக்டல் சாம்பல் மற்றும் பெருமூளைப் புறணி ஆகியவை உள்ளிட்ட மூளை மையங்கள் சிறுநீர்க்கழித்தலைக் கட்டுப்படுத்துகின்றன. நஞ்சுக்கொடிசார் பாலூட்டிகளில் சிறுநீரானது ஆண்குறி அல்லது யோனியில் உள்ள திறப்பு மூலம் வெளியேற்றப்படுகிறது.[2][3] :38,364
சிறுநீர் கழிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் உறுப்புகள், சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர்வழி ஆகும். டெட்ரூசர் என அறியப்படுகிற மென்மையான சிறுநீர்ப்பை தசையானது லும்பார் தண்டுவட நரம்பிழைகளிலிருந்து வரும் சிம்பதெடிக் நரம்புமண்டல இழைகள் மற்றும் திருவெலும்பு முள்ளந்தண்டிலிருந்து வரும் பாரா சிம்பதெடிக் இழைகள் ஆகியற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது]].[4] இடுப்பெலும்பு நரம்புகளில் உள்ள நரம்பிழைகள் வழியே சிறுநீர்ப்பையில் சிறுநீர் உட்செல்கிறது. சிறுநீர்ப்பைக்குச் செல்லும் பாராசிம்பதடிக் நரம்பிழைகள் இந்த நரம்பின் வழியேதான் பயணிக்கிறது. இவையே சிறுநீர் வெளியேறக் காரணமான தூண்டுதலை உருவாக்குகின்றன. ஆண் அல்லது பெண்ணின் சிறுநீர்வழியானது தண்டுவடத்திலிருந்து புறப்படும் சோமாட்டிக் நரம்புகளால் சூழப்பட்டதாகும்.[5]