சிறீவிஜயா விமானம் 182
From Wikipedia, the free encyclopedia
சிறீவிஜயா விமானம் 182 ஜகார்த்தாவிலிருந்து இந்தோனேசியாவின் பொண்டியானாக் செல்லும் உள்நாட்டுப் பயணிகள் விமானமாகும் . ஜனவரி 9, 2021 அன்று, இந்தப் போயிங் 737–524 இந்தப் பாதையில் பறந்தது, புறப்பட்ட நான்கு நிமிடங்களுக்குப் பிறகு ராடாரில் இருந்து காணாமல் போனது. விமான நிலையத்திலிருந்து 19 கிலோ மீட்டர் (12 மைல்கள், 10 கடல் மைல்கள்) தொலைவிற்கு அப்பால் ஆயிரம் தீவுகளுக்கு அப்பால் உள்ள தண்ணீரில் மோதியதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
விபத்துக்குண்டான விமானம் சுகர்ணோ-ஹத்தா பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் 2017 ஆம் ஆண்டு ஒளிப்படம் | |
விபத்து சுருக்கம் | |
---|---|
நாள் | 9 சனவரி 2021 (9 சனவரி 2021) |
சுருக்கம் | நொறுங்கியது; விசாரணையின் கீழ் (தேடுதல் நடக்கிறது) |
இடம் | லகி தீவிற்கு அருகே, ஆயிரம் தீவுகள், சாவகக் கடல் 5°57′50″S 106°34′28″E |
பயணிகள் | 50 |
ஊழியர் | 12 (பயணிகள் தவிர்த்த 6 பணியாளர்கள் உட்பட) [1][2][3] |
வானூர்தி வகை | போயிங் 737-524 |
வானூர்தி பெயர் | சிட்ரா |
இயக்கம் | சிறீவிஜயா ஏர் |
வானூர்தி பதிவு | பிகே-சிஎல்சி |
பறப்பு புறப்பாடு | சுகர்ணோ-ஹத்தா பன்னாட்டு வானூர்தி நிலையம், தஙராங், இந்தோனேசியா |
சேருமிடம் | சுபாடியோ பன்னாட்டு விமான நிலையம், போன்டியாநாக், மேற்கு கலிமந்தான், இந்தோனேசியா |
அப்பகுதியில் உள்ள உள்ளூர் மீனவர்களின் தகவல்களின் அடிப்படையில், விமானத்தைத் தேடும் பணி உடனடியாகத் தொடங்கப்பட்டது. இடிபாடுகள், மனித எச்சங்கள் மற்றும் உடைகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், முழு விமானத்தையும் அனைத்துப் பயணிகளையும் தேடும் பணிகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன. விமானத்தின் கருப்புப் பெட்டி (குரல் மற்றும் விமானத் தரவுப் பதிவுக்கருவி) நிலை இந்தோனேசிய அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.