சாதுக்கள்
From Wikipedia, the free encyclopedia
சாது (பன்மை : சாதுக்கள்) என்பவர் மதத்துறவி, பக்கிரி (துறவி), அல்லது இந்து சமயத்திலும், சைன சமயத்திலும், உலக வாழ்க்கையை நிராகரித்த ஒரு புனிதர் ஆவார். [1][2][3] இவர்கள் சில நேரங்களில் யோகி, சன்யாசி அல்லது சன்னியாசம் பெற்றவர் என்றும் அழைக்கப்படுவதுண்டு.[1]
This இக்கட்டுரை தனித்து விடப்பட்டக் கட்டுரை. வேறு எந்தக் கட்டுரையும் இக்கட்டுரையை இணைக்கவில்லை. தொடர்புடைய கட்டுரைகளுடன் இக்கட்டுரையை தயவு செய்து இணைக்கவும்; மற்றக் கட்டுரைகளுடன் இணைப்பதற்காக இணைப்பைத் தேடும் கருவியை பரிந்துரைக்காக பயன்படுத்திப் பாருங்கள். (ஏப்ரல் 2019) |
இலக்கியங்கள் இவர்களுக்கு இது ஒரு சாதகம் அல்லது ஒரு ஆன்மீக ஒழுக்கம் என்கிறது. [4] பெரும்பாலான சாதுக்கள் யோகிகளாக இருந்தாலும், அனைத்து யோகிகளும் சாதுக்கள் அல்ல, சாது என்பவர் மெல்ல மெல்ல மோட்சம் (விடுதலை) அடைபவர்களேயாகும். நான்காம் மற்றும் இறுதி ஆசிரமம் என்பது வாழ்க்கை நிலை, தியானம் மற்றும் சிந்தனை மூலம் பிரம்மத்தை அடைதலாகும். சாதுக்கள் பெரும்பாலும் எளிய ஆடைகளை அணிந்துகொள்கிறார்கள். இந்து மதத்தில் குங்குமப்பூ நிற ஆடைகளை அணிகிறார்கள். சைன மதத்தில் வெண்மையைத் தவிர எதுவும் இல்லை. அவற்றின் சன்யாசம் என்பது உலக உடைமைகளைத் துறத்தலைக் குறிக்கும். இந்து மதத்திலும், சைன மதத்திலும் உள்ள பெண் சாதுக்கள் "சாத்வி" அல்லது "ஆர்யிகா" என சில நூல்களில் அழைக்கப்படுகிறார்கள்.[3]