சத்தியேந்திர குமார் ஜெயின்
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
சத்தியேந்திர குமார் ஜெயின் (Satyendar Kumar Jain) ஆம் ஆத்மி கட்சியின் அரசியல்வாதி ஆவார். இவர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான தில்லி அரசின் அமச்சரவையில் 28 டிசம்பர் 2013 முதல் 28 பிப்ரவரி 2023 முடிய பதவி வகித்தவர்.[1] இவர் தில்லி அரசின் சுகாதாரம் & குடும்ப நலம், தொழில்கள், உள்துறை, மின்சாரம், குடிநீர், நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சராக செயல்பட்டவர்.
சத்தியேந்திர குமார் ஜெயின் | |
---|---|
கெஜ்ரிவாலின் மூன்றாவது அமைச்சரவை, தில்லி அரசு | |
பதவியில் 14 பிப்ரவரி 2015 – 28 பிப்ரவரி 2023 | |
துணைநிலை ஆளுநர் | நசீப் சங் அனில் பைஜால் வினைய் குமார் சக்சேனா |
அமைச்சரவை | கெஜ்ரிவாலின் மூன்றாவது அமைச்சரவை |
முதலமைச்சர் | அரவிந்த் கெஜ்ரிவால் |
துறைகள் |
|
முன்னையவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
பதவியில் 28 டிசம்பர் 2013 – 14 பிப்ரவரி 2014 | |
துணைநிலை ஆளுநர் | நசீப் சங் |
முதலமைச்சர் | அர்விந்த் கெஜ்ரிவால் |
துறைகள் |
|
முன்னையவர் | கிரண் வாலியா |
பின்னவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
தில்லி சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 14 பிப்ரவரி 2015 | |
முன்னையவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
தொகுதி | சக்கூர் பஸ்தி சட்டமன்றத் தொகுதி |
பதவியில் 28 டிசம்பர் 2013 – 14 பிப்ரவரி 2014 | |
முன்னையவர் | சியாம் லால் கார்க் |
பின்னவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
தொகுதி | சக்கூர் பஸ்தி சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 3 அக்டோபர் 1964 கீர்தல் கிராமம், பாக்பாத் மாவட்டம், உத்தரப் பிரதேசம் |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | ஆம் ஆத்மி கட்சி |
துணைவர் | பூனம் ஜெயின் |
பிள்ளைகள் | சௌமியா ஜெயின் மற்றும் சிரேயா ஜெயின் |
கல்வி | கட்டிடக் கலைஞர் |
வேலை | அரசியல்வாதி |
உடைமைத்திரட்டு | சுகாதாரம் & குடும்ப நலம், தொழில்கள், உள்துறை, மின்சாரம், குடிநீர், நகர்புற வளர்ச்சி |
இவர் பணமோசடி குற்றச்சாட்டில் அமலாக்க இயக்குனரகத்தால் 31 மே 2022 அன்று கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ளார்.[2] 28 பிப்ரவரி 2023 அன்று இவர் தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.[3][4]மே 2023ல் சத்தியேந்திர குமார் ஜெயின் மீது நடுவண் புலனாய்வுச் செயலகம் சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்தது.[5]26 மே 2023 அன்று இந்திய உச்ச நீதிமன்றம் பண மோசடி வழக்கில் சத்தியேந்திர குமார் ஜெயினுக்கு மருத்துவக் காரணங்களுக்காக இடைக்கால ஜாமீன் வழங்கியது.[6]