கொண்டைக் கடலை
From Wikipedia, the free encyclopedia
கொண்டைக் கடலை (Chickpea) என்பது பேபேசி குடும்பத்தைச் சார்ந்த பருப்பு ஆகும். இது இந்தியாவிலும் இதர ஆசிய நாடுகளிலும் பெரிதும் பயிரிடப்படுகிறது. கொண்டைக் கடலையை அவித்து, சுண்டி, அல்லது கறியாக்கி உண்ணலாம். உலக அளவில் இப்பருப்பு உற்பத்தியில் இந்தியாவே முன்னிலையில் உள்ளது. பாக்கித்தான், துருக்கி ஆகியனவும் கொண்டைக் கடலை உற்பத்தியில் குறிப்பிடத்தக்க நாடுகளாகும்.
விரைவான உண்மைகள் கொண்டைக் கடலை Chickpea, உயிரியல் வகைப்பாடு ...
கொண்டைக் கடலை Chickpea | |
---|---|
இடது: வங்காள வகை; வலது: ஐரோப்பிய வகை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | Magnoliopsida |
வரிசை: | Fabales |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | Faboideae |
பேரினம்: | Cicer |
இனம்: | C. arietinum |
இருசொற் பெயரீடு | |
Cicer arietinum L. | |
மூடு
கொண்டைக்கடலையில் இரண்டு வகைகள்உண்டு. ஒன்று வெள்ளை கொண்டைக் கடலை, மற்றொன்று நமக்கெல்லாம் நன்கு தெரிந்த கறுப்புக் கொண்டைக்கடலை. இது அளவில் சற்றுச் சிறியது, உறுதியானது. பொதுவாகச் சுண்டலாகவும் குழம்பில் சேர்க்கப்பட்டும் சாப்பிடப்படும் இது, நாடு முழுவதும் முக்கிய இடம்பிடித்திருக்கிறது. கறுப்புக் கொண்டைக்கடலை உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் நாடும் இந்தியா.[1][2][3]