கேரவன்செராய்
From Wikipedia, the free encyclopedia
கேரவன் செராய் (ஆங்கிலம்: Caravanserai) [1] என்பது சாலையில் பயணிக்கும் பயணிகள் (வணிகர்கள்) ஓய்வெடுக்கும் ஒரு விடுதியாகும். அவர்கள் நாளின் இறுதியில் தங்கி ஓய்வெடுத்து அன்றைய பயணத்திலிருந்து மீளவும் முடியும். ஆசிய, வட ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஐரோப்பாவை உள்ளடக்கிய வர்த்தக பாதைகளின் வலையமைப்பில் மக்கள் பயணிப்பது, வர்த்தகம், தகவல் தொடர்பு போன்றவற்றை இந்த விடுதிகள் ஆதரித்தது. குறிப்பாக பட்டுப் பாதை.
இந்த வகையான சாலையோர விடுதிகள் பட்டுப் பாதையில் மட்டுமல்லாமல், அகாமனியப் பேரரசின் அரசருக்கான சாலையிலும், 2,500 கிலோமீட்டர் நீளமுள்ள (1,600 மைல்) பழங்கால நெடுஞ்சாலை, எரோடோட்டசின் கூற்றுப்படி சர்தீசிலிருந்து சூசா வரை நீண்டுள்ளது: [2] இந்திய துணைக் கண்டத்தில் பெரும் தலைநெடுஞ்சாலையில், குறிப்பாக முகலாய டெல்லி மற்றும் வங்காள சுபா பகுதியில் மற்ற குறிப்பிடத்தக்க நகர்ப்புற சாலையோர விடுதிகள் கட்டப்பட்டது.