குலாகு கான்
மத்திய கிழக்கை ஆண்ட மங்கோலிய ஈல்கானரசின் பேரரசர் / From Wikipedia, the free encyclopedia
குலாகு கான் என்பவர் ஒரு மங்கோலிய மன்னன் ஆவார். இவர் மேற்கு ஆசியாவின் பெரும்பகுதியைக் கைப்பற்றினார். இவரது தந்தை பெயர் டொலுய். இவரது தாயார் கெரயிடு பழங்குடியினத்தைச் சேர்ந்த இளவரசியான சோர்காக்டனி பெகி. இவர் மங்கோலியத் தலைவர் செங்கிஸ் கானின் பேரன் ஆவார். இவருக்கு மோங்கே கான் மற்றும் குப்லாய் கான் என்ற இரு அண்ணன்களும், அரிக் போகே என்ற ஒரு தம்பியும் உண்டு.
குலாகு கான் | |
---|---|
ஈல்கானரசின் ஈல்கான் | |
14ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ரசீத்தல்தீன் அமாதானியின் நூலிலுள்ள குலாகு கானின் ஓவியம். | |
ஆட்சி | 1256– 8 பெப்ரவரி 1265 |
பின்வந்தவர் | அபகா கான் |
அரசி |
|
வாரிசு(கள்) |
|
அரச குடும்பம் | போர்ஜிகின் |
தந்தை | டொலுய் |
தாய் | சோர்காக்டனி பெகி |
பிறப்பு | அண். 1217 மங்கோலியா |
இறப்பு | (அகவை 47) சர்ரினே ஆறு |
அடக்கம் | சாகி தீவு, உருமியா ஏரி |
சமயம் | தெங்கிரி மதம், பௌத்தம்[1][2] |
முத்திரை |
குலாகுவின் இராணுவம் தென்மேற்குப் பகுதியில் மங்கோலியப் பேரரசைப் பெரிதும் விரிவாக்கம் செய்தது. இவர் பாரசீகத்தில் ஈல்கானரசு எனும் பேரரசைத் தோற்றுவித்தார். ஈல்கானரசு சபாவித்து அரசமரபின் முன்னோடியாகும். இதன் மூலம் நவீன ஈரானின் உருவாக்கத்திற்கு இவர் காரணமாக இருந்துள்ளார். குலாகுவின் தலைமையின் கீழ் மங்கோலிய இராணுவமானது, பகுதாது முற்றுகையைக் கி.பி. 1258ல் நடத்தியது. இதன் காரணமாக இசுலாமிய சக்தியின் மிகப் பெரிய மையம் அழிக்கப்பட்டு இசுலாமியப் பொற்காலம் முடிந்து போனது. அப்பாசியக் கலீபகம் அழிந்து போனது. மேலும் மற்றுமொரு முக்கிய நகரமான திமிஷ்கு பலவீனமானது. இதனால் இசுலாமிய உலகில் செல்வாக்கு மிகுந்தவர்களாக கெய்ரோவில் இருந்த அடிமை வம்சத்தினர் மாறினர்.