குமாவுன் கோட்டம்
From Wikipedia, the free encyclopedia
குமாவுன் கோட்டம் (Kumaon Division) இந்தி: कुमाऊं) வட இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் இரண்டு கோட்டங்களில் ஒன்றாகும். மற்றது கார்வால் கோட்டம் ஆகும். இக்கோட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் நைனிடால் நகரத்தில் உள்ளது. மேலும் உத்தரகண்ட் மாநிலத்தின் உயர்நீதிமன்றம் நைனிடால் நகரத்தில் அமைந்துள்ளது.[1] குமாவுன் கோட்டத்தில் பெரும்பாலும் குமாவுனி மொழி பேசும் குமாவுனி மக்கள் வாழ்கின்றனர். இந்திய விடுதலைக்கு முன்னர் வரை இக்கோட்டப் பகுதிகளை குமாவுன் இராச்சியத்தினர் ஆண்டனர்.