குண்டாறு (ஆந்திரம்)
ஆந்திர ஆறு / From Wikipedia, the free encyclopedia
குண்டாறு (Kundu River) என்பது குண்டேரு, குமுத்வதி என்றும் அழைக்கப்படும் ஆறு இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் இராயலசீமைப் பகுதியில் உள்ள பெண்ணாற்றின் துணை நதியாகும். கர்நூல் மாவட்டத்தின் ஓர்வகல் மண்டலத்தில் உள்ள உப்பலபாடு கிராமத்தின் அருகே நீரூற்றாக உருவாகி, கடப்பா மாவட்டம் கமலாபுரத்தில் உள்ள பெண்ணாற்றுடன் இணைவதற்கு முன்பு பல மாற்றங்களைச் சந்தித்து ஓடுகிறது. நந்தியால் மற்றும் கோயில்குந்த்லா பகுதிகளுக்கு அடிக்கடி ஏற்படும் வெள்ளப்பெருக்கு காரணமாக இது அறியப்படுகிறது. எனவே இது "நந்தியாலின் சோகம்" என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது. ஆனால் தற்காலத்தில் நந்தியால் நகரம் அதிக மக்கள்தொகை கொண்ட பெரிய நகரமாக மாறியுள்ளது. இதனால் கழிவுநீர் முன் சுத்திகரிப்பு இல்லாமல் குண்டாற்றில் வெளியேற்றப்படுகிறது. தொழிலதிபர்கள் லாபத்தில் தங்கள் பார்வையைச் செலுத்தி ஆற்றை அதிகபட்ச அளவிற்கு மாசுபடுத்துகின்றனர். நந்தியாலா ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் கிராம மக்கள் பல்வேறு தோல் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாசுபாடு விலங்குகளின் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. பழங்காலத்தில் இந்த ஆறு குமுதவதி என்று அழைக்கப்பட்டது. குண்டாற்று நீரைக் குடிப்பவன் எதிரிகளை எதிர்கொள்ளும் அபார தைரியத்தைப் பெறுவான் என்று இராயலசீமாவில் கூறப்படும் பழமொழி. குண்டாற்றுப் பள்ளத்தாக்கு ரேநாடு என்று அழைக்கப்படுகிறது. இது "ரேனாதி பவுருஷம்" என்ற சொல்லின் அடையாளமாகும்.[1]