கிருபை தயாபத்து செபம்
From Wikipedia, the free encyclopedia
கிருபை தயாபத்து செபம் அல்லது "இரக்கத்தின் அரசி செபம்" என்பது, கத்தோலிக்க திருச்சபையில் தூய கன்னி மரியாவுக்கு திருப்புகழ்மாலையில் பாடப்படும் திருவழிபாட்டு கால பாடல்கள் நான்கினுள் ஒன்றாகும். வழக்கமாக இது திரித்துவ ஞாயிறுக்கு முன் இரவு துவங்கி திருவருகைக் கால முதல் ஞாயிறுவரை திருப்புகழ்மாலையின் இரவு செபத்தில் பயன்படுத்தப்படுகின்றது. இச்செபமானது கத்தோலிக்க செபமாலையின் நிறைவுசெய்யும் விதமாகவும் பலரால் பயன்படுத்தப்படுகின்றது. இச்செபம் நடுக் காலமுதல் பழக்கத்தில் உள்ளது.[1]