காரன்வாலிஸ்
From Wikipedia, the free encyclopedia
சார்லஸ் காரன்வாலிஸ் (Charles Cornwallis, 1st Marquess Cornwallis), பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பெனியின் வங்காள மாகாணத்தின் தலைமை ஆளுநராக 1786 முதல் 1793 முடிய பணிபுரிந்தவர்.[1][2] மேலும் பிரித்தானியப் பேரரசின் சார்பாக, ஏழாண்டுப் போர், அமெரிக்கப் புரட்சிப் போர் மற்றும் மூன்றாவது ஆங்கில மைசூர் போர்களில் கலந்து கொண்டு போரிட்டவர்.
ஜெனரல் காரன்வாலிஸ் | |
---|---|
1795ல் காரன்வாலிசின் ஓவியம் | |
இந்தியத் தலைமை ஆளுநர், வில்லியம் கோட்டை, வங்காள மாகாணம் | |
பதவியில் 12 செப்டம்பர் 1786 – 28 அக்டோபர் 1793 | |
ஆட்சியாளர்கள் | மன்னர் மூன்றாம் ஜார்ஜ், ஐக்கிய இராச்சியம் |
பிரதமர் | ஜூனியர் வில்லியம் பிட் |
முன்னையவர் | சர் ஜான் மெக்பெர்சன்(தற்காலிக இந்தியத் தலைமை ஆளுநர்) |
பின்னவர் | சர் ஜான் சோர் |
பதவியில் 30 சூலை 1805 – 5 அக்டோபர் 1805 | |
ஆட்சியாளர் | மன்னர் மூன்றாம் ஜார்ஜ் |
பிரதமர் | வில்லியம் பிட், ஜூனியர் |
முன்னையவர் | ரிச்சர்டு வெல்லஸ்லி |
பின்னவர் | சர் ஜார்ஜ் பார்லோ தற்காலிகத் தலைமை ஆளுநர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஐந்தாம் சார்லஸ் எட்வர்டு காரன்வாலிஸ் (1738-12-31)31 திசம்பர் 1738 மேபேர், லண்டன், இங்கிலாந்து |
இறப்பு | 5 அக்டோபர் 1805(1805-10-05) (அகவை 66) காஜிப்பூர் காசி நாடு |
தேசியம் | பிரித்தானியப் பேரரசு |
துணைவர் | ஜெமிமா துல்லேகின் ஜோன்ஸ் |
பிள்ளைகள் | மேரி |
முன்னாள் கல்லூரி | ஈடன் கல்லூரி கிளேர் கல்லூரி, கேம்பிரிட்ச் |
வேலை | இராணுவப் படைத்தலைவர் |
விருதுகள் | திருத்தகை (Knight) |
கையெழுத்து | |
Military service | |
பற்றிணைப்பு | பெரிய பிரித்தானியா (1757–1801) ஐக்கிய இராச்சியம் (1801–1805) |
கிளை/சேவை | ஐக்கிய இராச்சியம் இராணுவம் |
சேவை ஆண்டுகள் | 1757–1805 |
தரம் | தலைமைப் படைத்தலைவர் |
கட்டளை | தலைமைப் படைத்தலைவர், பிரித்தானிய இந்தியா & தலைமைப் படைத்தலைவர் அயர்லாந்து |
போர்கள்/யுத்தங்கள் | ஏழாண்டுப் போர் அமெரிக்கப் புரட்சிப் போர் மூன்றாவது ஆங்கில மைசூர் போர் அயர்லாந்து கிளர்ச்சி, 1798 |
காரன்வாலிசின் முன்னோர்கள் முதலாம்சார்லசுக்கு சேவை செய்தவர்கள். இரண்டாம்சார்லசு காலத்திலும் அவருக்கு துணையாய் நின்றவர்கள். எனவே வெளிநாடு சென்று கல்வி கற்பதிலும் ,அரசியல் செல்வாக்கு அடைவதிலும் அதிக சிரமம் ஏற்படவில்லை. அமெரிக்காவுடன் மோதல் போக்கை தவிர்க்க முயன்றாலும், அமெரிக்க போரில் இவர் ஈடுபடும் கட்டாயம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் இவருக்கு வெற்றி கிட்டினாலும் இறுதியில் யார்க் டவுன் போரில் தோல்வியுற்று கைது ஆனார். பின் பரோலில் விடுதலை செய்யப்பட்டு இங்கிலாந்து வந்தடைந்தார். பின்னர் இந்திய கவர்னர் ஜெனரல் மற்றும் ராணுவ கமாண்டர் ஆக பொறுப்பேற்றார்.
பிரித்தானிய இந்தியாவில் நிலையான நிலவரித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ஜார்ஜ் பார்லே எனும் சக அதிகாரியின் துணையுடன் சட்டத்தொகுப்பை உருவாக்கினார். சர் வில்லியம் ஜோன்ஸ் என்பரின் உதவியுடன் நீதித் துறையை சீரமைத்தார். குற்றவியல் வழக்குகளில் இந்துச் சட்டங்கள் கடைபிடிக்கப்பட்டது.
மாவட்ட அளவில் இருந்த இந்திய நீதிபதிகள் மாவட்ட முன்சிப் என அழைக்கபப்ட்டனர். சதர், திவானி, அதாலத், எனும் உரிமையியல் மற்றும் சதர் நிசாமத் அதாலத் எனும் குற்றவியல் உயர்நீதிமன்றம் கல்கத்தாவில் அமைக்கப்பட்டது. ஆட்சிப் பணி நியமனங்களில் தகுதி மட்டும் கருத்தில் கொள்ளப்பட்டது.
காரன்வாலிஸ் 1789ல் கிழக்கிந்தியப் படைகளுடன் மராத்தியர் மற்றும் ஐதராபாத் படைகளுடன் இணைந்து, மைசூரின் திப்பு சுல்தானைக்கு எதிராக கூட்டமைப்பு உருவாக்கினார். மூன்றாம் மைசூர் போரில், தோல்வியடைந்த திப்புவிடமிருந்து, பெங்களூர், திண்டுக்கல் மற்றும் மலபார் பகுதிகளையும், போர் ஈட்டுத் தொகையும் பெற்றார். அயர்லாந்தில் கலகம் ஏற்படவே அங்கு சென்றார். நெப்போலியனுடன் சமரசம் கண்டார். பின்னர் மறுபடியும் இந்தியாவிற்கு வந்து, சில நாளில் நோய் வாய்ப்பட்டு மரணம் அடைந்தார்.