காசி நாடு
1194 வரை காணப்பட்ட ஒரு சுதந்திர பூமிஹார் பிராமண (நிலவுடைமையாளரான பிராமணர்) நாடாகும். / From Wikipedia, the free encyclopedia
காசி இராச்சியம் கிமு 600 முதல் கிமு 300 வரை மகாஜனபத நாடுகளில் ஒன்றாக விளகியது. பின்னர் கிபி 1194-ஆம் ஆண்டு வரை காணப்பட்ட ஒரு சுதந்திர பூமிஹார் பிராமண (நிலவுடைமையாளரான பிராமணர்) நாடாக இருந்தது. இது 1740-இல்பிரித்தானிய இந்தியாவின் பகுதியாக இருந்தது. இதன் தலைநகரம் வாரணாசி ஆகும். 1892-ஆம் ஆண்டில் 2266 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட காசி இராச்சியத்தின் மொத்த மக்கள் தொகை 1,15,773 ஆக இருந்தது. இங்கு ராம்நகர் கோட்டையும் அதன் நூதன சாலையும் அமைந்துள்ளது. காசியின் மன்னர்களின் வரலாற்றைக் கூறும் எச்சங்களாக இவை உள்ளன. மேலும் 18ம் நூற்றாண்டிலிருந்து காசி மன்னர்களின் வதிவிடமாகவும் இதுவே திகழ்கிறது.[1] தற்காலத்திலும் காசியின் மன்னர், காசியின் மக்களால் மிகவும் மரியாதைக்குரியவராகக் கருதப்படுகிறார்.[1] இவர் ஒரு சமயத் தலைவராக உள்ளதோடு காசியின் மக்கள் இவரை சிவபெருமானின் மறுபிறவியாகவே கருதுகின்றனர்.[1] இவர் ஒரு கலாசாரத் தலைவராகவும் உள்ளதோடு, அனைத்து சமய விழாக்களிலும் முக்கிய பங்கு வகிக்கிறார்.[1] மன்னர் குடும்பத்தினர் தம்மைச் சிவனின் வழிவந்தவர்களாகக் குறிப்பிடுவதோடு காசிக்கு யாத்திரை வருவோரிடமிருந்து சிறந்த அனுகூலங்களைப் பெற்று வருகின்றனர்.
பனாரஸ் இராச்சியம் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1740–1948 | |||||||||||
தலைநகரம் | வாரணாசி | ||||||||||
சமயம் | இந்து சமயம் (அரசு சமயம்) | ||||||||||
மகாராஜா | |||||||||||
வரலாறு | |||||||||||
• தொடக்கம் | 1740 | ||||||||||
1948 | |||||||||||
மக்கள் தொகை | |||||||||||
• 1892 | 115,773 | ||||||||||
| |||||||||||
தற்போதைய பகுதிகள் | வாரணாசி கோட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா |