கலவியற்ற இனப்பெருக்கம்
From Wikipedia, the free encyclopedia
கலவியற்ற இனப்பெருக்கம் (Asexual reproduction) அல்லது பால்சாரா இனப்பெருக்கம் என்பது ஒரு தனியனில் மட்டும் இருந்து அடுத்த தலைமுறை தனியன்கள் உருவாகும் ஒரு வகையான இனப்பெருக்க முறையாகும். குறிப்பிட்ட அந்த தனியனில் இருக்கும் மரபணுக்கள் மட்டுமே அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படும். இங்கே தாய், தந்தை என்ற இரு பெற்றோர் இருப்பதில்லை. முக்கியமாக இந்த வகை இனப்பெருக்கத்தில், உயிரணுக்களில் மடியநிலை இழப்புடன் ஏற்படும் ஒடுக்கற்பிரிவினால் உருவாகும் பாலணுக்களின் தோற்றமோ, அல்லது அவற்றிற்கிடையில் நிகழும் கருக்கட்டலோ நிகழ்வதில்லை.
இதுவே ஆர்க்கீயா, பாக்டீரியா, அதிநுண்ணுயிரி போன்ற தனிக்கல உயிரினங்களில் உள்ள முதன்மையான இனப்பெருக்க முறையாகும். அதேவேளை பல்கல உயிரினங்களான பூஞ்சை, வேறும் பல தாவரங்களும் கலவியில்முறை இனப்பெருக்கத்தை தமது இனப்பெருக்க முறையாகக் கொண்டுள்ளன.