கண்டிப் போர்கள்
From Wikipedia, the free encyclopedia
கண்டி இராச்சியம் (Kingdom of Kandy), இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதியில் கி.பி. 14 ஆம் நூற்றாண்டு தொடக்கம் மார்ச் 2 1815 இல் பிரித்தானியரால் கைப்பற்றப்படும் வரை இருந்த ஓர் இராச்சியமாகும். இலங்கையின் கண்டி அரசை ஆண்ட கடைசி மன்னன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் (1780 - ஜனவரி 30, 1832) ஆவான். பிரித்தானியர் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்ததன் பின்பு கண்டி இராச்சியத்தையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர பல திட்டங்களைத் தீட்டினர். இலங்கையை ஆட்சி செய்த போர்த்துக்கேயர், ஒல்லாந்தரால் கண்டி இராச்சியத்தை கைப்பற்றிக் கொள்ள முடியவில்லை.