கட்டின் படுகொலை
From Wikipedia, the free encyclopedia
கட்டின் படுகொலை (Katyn massacre[lower-alpha 1] ) என்பது சுமார் 22,000 போலந்து இராணுவ அதிகாரிகளும் அறிவுஜீவி போர்க் கைதிகளும் சோவியத் ஒற்றியத்தினால், குறிப்பாக 'உள்நாட்டு விவகாரங்களுக்கான மக்கள் ஆணையம்' எனப்பட்ட சோவியத் இரகசிய காவல் துறை மூலம் 1940 ஏப்ரலிலிலும் மேயிலும் இடம்பெற்ற தொடர்ச்சியான படுகொலைகளாகும். கலினின், கார்கீவ் ஆகிய சிறைச்சாலைகளிலும் மற்ற இடங்களிலும் கொலைகள் நடந்தாலும், இந்தப் படுகொலைகளுக்கு கட்டின் காடு என்று இடத்தின் பெயரிடப்பட்டது. இவ்விடத்திலேயே சில புதைகுழிகள் முதலில் ஜெர்மன் படைகளால் கண்டுபிடிக்கப்பட்டன.
விரைவான உண்மைகள் கட்டின் படுகொலை, இடம் ...
கட்டின் படுகொலை | |
---|---|
சோவியத் ஒன்றியத்தின் போலந்து படையெடுப்பு (இரண்டாம் உலகப் போர் கால) விளைவும் போலந்து குடிமக்கள் மீதான சோவியத் அடக்குமுறையும் | |
1943 ஆம் ஆண்டு கட்டின் காட்டில் படுகொலை செய்யப்பட்ட போலந்து அதிகாரிகளின் புதைகுழிகள் தோண்டி எடுக்கப்பட்ட புகைப்படம் | |
இடம் | கட்டின் காடு, கலினின், கார்கீவ், சோவியத் ஒன்றிய சிறைச்சாலைகள் |
நாள் | ஏப்ரல் - மே 1940 |
தாக்குதலுக்கு உள்ளானோர் | போலந்து இராணுவ அதிகாரிகள், அறிவுஜீவி போர்க் கைதிகள் |
தாக்குதல் வகை | போர் குற்றம், தலை துண்டித்தல், படுகொலை |
இறப்பு(கள்) | 22,000 |
தாக்கியோர் | சோவியத் இரகசிய காவல் துறை |
மூடு
ஜோசப் ஸ்டாலின் தலைமையிலான சோவியத் பொலிட்பீரோ மூலம் போலந்து படையின் சிறைப்பிடிக்கப்பட்ட அதிகாரி உறுப்பினர்களை தூக்கிலிடுவதற்கான உத்தரவு இரகசியமாக கட்டளையிடப்பட்டது.[1]