கடவுளின் அன்னையே கன்னி மரியே!
From Wikipedia, the free encyclopedia
கடவுளின் அன்னையே கன்னி மரியே! (கிரேக்கம்: Ὑπὸ τὴν σὴν εὐσπλαγχνίαν; இலத்தீன்: Sub tuum praesidium) எனத் தொடங்கும் பாடலானது தூய கன்னி மரியாவைக் குறித்து கத்தோலிக்க திருச்சபையில் திருப்புகழ்மாலையின் இரவு மன்றாட்டின் முடிவில் பாடப்படும் நான்கு பாடல்களுள் ஒன்றாகும்.[1] இதுவே மிகவும் பழைய, இன்றும் வழக்கில் உள்ள கன்னி மரியாவின் பாடலாகும்.[2] இது பெரும்பாலும் கிருபை தயாபத்து செபத்தின் முடிவில் சொல்லப்படுவது வழக்கமாகும்.
இப்பாடலில் ஒரு வடிவம் 3ம் நூற்றாண்டினைச்சேர்ந்த அலெக்சாந்திரியாவின் காப்டிக் மரபுவழி திருச்சபையின் கிறித்துமசு வழிபாட்டில் இடம்பெருகின்றது. சுமார் கி.பி 250இல் கிரேக்க மொழியில் இப்பாடல் எழுதப்பட்ட சுவடி உள்ளது.[3]
அந்தோனியோ சாலியரி, வொல்ஃப்கேங்க் அமதியுஸ் மோட்சார்ட் முதலிய பலர் இப்பாடலுக்கு இசையமைத்துள்ளனர்.