கங்கை ஆறு
இந்தியா மற்றும் வங்கதேசத்தில் பாய்கிற ஆறு / From Wikipedia, the free encyclopedia
கங்கை (ஒலிப்புⓘ) (/ˈɡændʒiːz/ GAN-jeez), (Hindustani: [ˈɡəŋɡaː]) என்பது இந்தியா மற்றும் வங்கதேச நாடுகளின் வழியாக பாய்கின்ற ஒரு ஆறாகும். இது இந்தியாவின் முக்கிய ஆறு . கங்கை இந்தியாவின் தேசிய நதி ஆகும்.[1] இமய மலையில் உத்தராகண்டம் மாநிலத்திலுள்ள கங்கோத்ரியில் தொடங்கும் பாகிரதி நதியானது, தேவப்பிரயாக் எனுமிடத்தில் அலக்நந்தா ஆற்றுடன் கலந்து கங்கையாகிறது.
கங்கை ஆறு, வாரணாசி | |
ஆறு | |
கங்கை | |
நாடுகள் | இந்தியா, வங்காளம் |
---|---|
மாநிலங்கள் | உத்தரகண்ட், உத்தர பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம் |
நகரங்கள் | ஹரித்வார், கான்பூர், சஜ்மு, அலகாபாத், வாரணாசி, மிர்சாபூர், காசிப்பூர், பாட்னா, ரிஷிகேஷ், மங்கர், பகல்பூர், கொல்கத்தா |
உற்பத்தியாகும் இடம் | கங்கோத்ரி பனியாறு, சடோபந்த் பனியாறு, பிண்டாரி பனியாறு |
- அமைவிடம் | உத்தரகண்ட், இந்தியா |
- உயர்வு | 3,892 மீ (12,769 அடி) |
- ஆள்கூறு | 30°59′N 78°55′E |
கழிமுகம் | கங்கை டெல்டா |
- அமைவிடம் | வங்காளம், வங்காளம் & இந்தியா |
- elevation | 0 மீ (0 அடி) |
- ஆள்கூறு | 22°05′N 90°50′E |
நீளம் | 2,525 கிமீ (1,569 மைல்) |
வடிநிலம் | 10,80,000 கிமீ² (4,16,990 ச.மைல்) |
Discharge | for பரக்கா பற்றகே |
- சராசரி | |
- மிகக் கூடிய | |
- மிகக் குறைந்த | |
Discharge elsewhere (average) | |
- வங்காளம் | |
கங்கை ஒருங்கிணைந்த வடிகால் பேசின்கள் வரைபடம் (செம்மஞ்சல்), பிரம்மபுத்திரா (ஊதா), மற்றும் மேக்னா (பச்சை).
|
பிறகு உத்தரப் பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்கள் வழியாகச் சென்று, ஹூக்லி, பத்மா என இரு ஆறுகளாக பிரிந்து முறையே மேற்கு வங்காளம், வங்கதேசம் வழியாகச் சென்று மிகப்பெரிய வளமான கழிமுகத்தை உருவாக்கி வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
கங்கை ஆறு மொத்தம் 2525 கி.மீ ஓடுகிறது. ரிஷிகேஷ், ஹரித்வார், அலகாபாத், வாரணாசி, பட்னா, கொல்கத்தா ஆகியவை இவ்வாற்றின் கரையில் அமைந்த முக்கிய நகரங்களாகும்.
வங்கதேசத்தில் கங்கை ஆறு பத்மா ஆறு என அழைக்கப்படுகிறது.
கங்கை இந்துகளின்[2] புனித நதியாக திகழ்கிறது.[3] இது இந்து மதக் கடவுள் கங்காதேவி எனவும் அழைக்கப்பட்டு வணங்கப்படுகிறது.[4] மில்லியன் கணக்கான இந்தியர்கள் தங்கள் வாழ்நாளில் தங்கள் அன்றாட தேவைகளுக்கு இந்த ஆற்றைச் சார்ந்து வாழ்கின்றனர்.[5] இந்த நதியினை சார்ந்து மனிதர்கள் மட்டுமல்லாது பல்லாயிரக்கணக்கான உயிர்கள் வாழ்கின்றன.[5] இதன் வடிநிலத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இராச்சியங்கள் அல்லது பேரரசுகளின் தலைநகர்கள் ( கன்னோசி, காம்பில்யா,[6] கரா, பிரயாகை அல்லத் அலகாபாத், காசி, பாடலிபுத்திரம் அல்லது பாட்னா, ஹாஜிப்பூர், முன்கிர், பாகல்பூர், முர்சிதாபாத், பாரம்பூர், நபதிவீப், சப்தகிராம், கொல்கத்தா, தாக்கா போன்ற[6]) போன்றவை அமைந்துள்ளன. இந்தியாவின் பெருமைமிகு புனித நதிகளில் ஒன்றான கங்கை ஆறும், அதன் பிறப்பிடமான இமயமலையின் பனிமுகடும் உயிருள்ள நபர்கள் என்று இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.[7]
கங்கை ஆறு 2007 ஆம் ஆண்டில் உலகின் ஐந்தாவது மிக மாசுபடுத்தப்பட்ட நதி என மதிப்பிடப்பட்டது. இந்த மாசுபாடானது மனிதர்களை மட்டுமல்லாமல், 140 க்கும் மேற்பட்ட மீன் வகைகள், 90 நிலநீர் வாழி வகைகள், கங்கை டால்பின்கள் ஆகியவற்றையும் அச்சுறுத்துகிறது.[8] வாரணாசி அருகில் கங்கை ஆற்று நீரில் கலக்கும் மனித கழிவுகளிலின் மாசின் அளவானது இந்திய அரசின் அதிகாரப்பூர்வ வரம்பைவிட 100 பங்கு அதிகமாகும்.[8] கங்கை ஆற்றைத் தூய்மைப் படுத்த வகுக்கப்பட்ட சுற்றுச்சூழல் முயற்சியான கங்கை செயல் திட்டம் என்ற திட்டமானது, ஊழல், தொழில்நுட்ப நிபுணத்துவம் இல்லாதது,{{efn|name=sheth|1= (Sheth 2008)
மோசமான சுற்றுச்சூழல் திட்டமிடல்,[lower-alpha 1] மற்றும் சமயத் தலைவர்களின் ஆதரவு இல்லாதது[lower-alpha 2] போன்ற காரணங்களினால் இதுவரை பெரிய தோல்வியிலேயே முடிந்தது.[lower-alpha 3]{{{efn|name=gardner|1=(Gardner 2003)
[9]