எழுத்தச்சன் விருது
From Wikipedia, the free encyclopedia
எழுத்தச்சன் விருது (Ezhuthachan Puraskaram) என்பது கேரள அரசின் கேரள சாகித்திய அகாதமியால் வழங்கப்படும் மிக உயர்ந்த இலக்கிய விருதாகும். இந்த விருது மலையாள மொழியின் தந்தை துஞ்சத்து எழுத்தச்சன் நினைவாக பெயரிடப்பட்டது. இந்த விருதினைப் பெறுபவர் ₹ 5,00,000 ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுப் பத்திரத்தினைப் பெறுவார்.[1] இந்த விருது 1993-ல் நிறுவப்பட்டது. சூரநாடு குஞ்சன் பிள்ளை எழுத்தச்சன் விருதைப் பெற்ற முதல் இலக்கியவாதி ஆவார்.[2]