எருசலேம் முற்றுகை (கிபி 70)
From Wikipedia, the free encyclopedia
எருசலேம் முற்றுகை (Siege of Jerusalem) என்பது கி.பி. 70 இல் இடம்பெற்ற முதலாம் யூத-உரோமைப் போரின் தீர்மானிக்கப்பட்ட இறுதி நிகழ்வாகும். கி.பி. 66 இல் யூதப் பாதுகாவலர்களால் கைப்பற்றப்பட்ட எருசலேம், அன்றைய எதிர்காலப் பேரரசரான தித்துசினாலும் அவருக்கு அடுத்த நிலைத் தளபதி திபேரியுசு இயூலியுசு அலெக்சாண்டரினாலும் வழிநடத்தப்பட்ட உரோமைப் பேரரசுப் படை எருசலேம் நகரை முற்றுகையிட்டு வெற்றி கொண்டது.
எருசலேம் முற்றுகை | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
முதலாம் யூத-உரோமைப் போர் பகுதி | ||||||||||
எருசலேம் கொள்ளையிடப்படல், தித்துஸ் வளைவு உட்பக்கச் சுவர் - உரோம் |
||||||||||
|
||||||||||
பிரிவினர் | ||||||||||
யூத புரட்சி அரசாங்கம் |
|
|||||||||
தளபதிகள், தலைவர்கள் | ||||||||||
தித்துசு | சீமோன் பார் கியோரா |
|
||||||||
பலம் | ||||||||||
70,000 | 20,000 – 30,000 | 10,000 | ||||||||
இழப்புகள் | ||||||||||
தெரியாது | 30,000 | 10,000 |
அம்முற்றுகை, நகரம் முழுவதும் கொள்ளையிடப்பட்டு, புகழ்பெற்ற இரண்டாம் எருசலேம் கோவில் அழிக்கப்பட்டதும் நிறைவுற்றது. முதலாம், இரண்டாம் எருசலேம் கோவிலின் அழிவு குறித்து இன்றும் யூத நோன்பான "திஃச பாவ்" என ஆண்டுதோறும் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. உரோமையரால் எருசலேம் நகரமும் கோவிலும் சூறையாடப்பட்டு வெற்றி கொள்ளபட்டதன் நினைவாகக் கட்டப்பட்ட தித்துஸ் வளைவு இன்றும் உரோமையில் உள்ளது.