எப்லா இராச்சியம்
From Wikipedia, the free encyclopedia
எப்லா (Ebla; அரபு மொழி: إبلا, modern: تل مرديخ, Tell Mardikh), சிரியாவின் பண்டைய இராச்சியங்களில் ஒன்றாகும். எப்லா இராச்சியம் கிமு 3500 முதல் கிமு 1600 வரை ஆட்சி செலுத்தியது.[1][2] எப்லா பண்பாட்டுத் தொல்லியல் களங்கள், அலெப்போ நகரத்திற்கு தென்மேற்கே 55 கிலோ மீட்டர் தொலைவில், மார்திக் கிராமத்தின் அருகே பண்டைய எப்லா நகரம் இருந்தது. எல்பா நகரம் கிமு 3,000 முதல் கிமு 1600 ஆண்டின் நடுப்பகுதி வரை முக்கிய மையமாக விளங்கியது. எல்பா தொல்லியல் அகழ்வாராய்ச்சியின் படி, எப்லா நாகரீகம், வெண்கலக் காலததில் லெவண்ட், பண்டைய எகிப்து மற்றும் ஊர் நாகரீகத்திற்கு இணையானதாகக் கருதப்படுகிறது. எப்லா நகரம் கிபி 7ம் நூற்றாண்டில் முற்றிலும் அழிவுற்றது.
எப்லா | |
---|---|
டமாஸ்கஸ் நுழைவாயில் மற்றும் வெளிச்சுவர்களின் சிதைவுகள் | |
மாற்றுப் பெயர் | Tell Mardikh تل مرديخ |
இருப்பிடம் | இட்லிப் ஆளுநரகம், சிரியா |
பகுதி | லெவண்ட் |
ஆயத்தொலைகள் | 35.798°N 36.798°E / 35.798; 36.798 |
வகை | settlement |
வரலாறு | |
கட்டப்பட்டது | கிமு 3500 |
பயனற்றுப்போனது | கிபி 7ம் நூற்றாண்டு |
காலம் | வெண்கலக் காலம் |
கலாச்சாரம் | கிஷ் பண்பாடு, அமொரிட்டுகள் |
பகுதிக் குறிப்புகள் | |
அகழாய்வு தேதிகள் | 1964–2011 |
அகழாய்வாளர் | பாவ்லோ மத்தியா |
நிலை | சிதைந்த நிலையில் |
உரிமையாளர் | பொது |
பொது அனுமதி | Yes |
துவக்க வெண்கலக் காலத்தில், கிமு 3500ல் குறுநில அரசாகத் தோன்றிய எப்லா இராச்சியம், பன்னாட்டு வணிகத்தில் முன்னேறி, கிழக்கு மற்றும் வடக்கு சிரியாப் பகுதிகளை கைப்பற்றி ஆண்டது.
கிமு 23ம் நூற்றாண்டில் முதல் எப்லா இராச்சியம் அழிக்கப்பட்டது. [1] [3]
எப்லா இராச்சியம் இரண்டாம் முறையாக, மூன்றாவது ஊர் வம்சத்தவரால் மீண்டும் நிறுவப்பட்டது. மீண்டும் எப்லா இராச்சியம் அழிக்கப்பட்டபோது, அமோரிட்டு பழங்குடிகளால் மீண்டும் மூன்றாவது முறையாக எப்லா இராச்சியம் நிறுவப்பட்டது. இம்மூன்றாம் எப்லா இராச்சியம், கிமு 1600ல் இட்டைட்டுப் பேரரசால் அழிக்கப்படும் வரை ஆட்சி செய்தது.