இலை
From Wikipedia, the free encyclopedia
இலை (leaf) என்பது பூக்கும் தாவரத் தண்டின் முதன்மை ஒட்டுறுப்பாகும் அல்லது இணைவாகும்;[1] இது தரைக்கு மேலே பக்கவாட்டில் தோன்றுகிறது. இலை ஒளிச்சேர்க்கை நிகழும் உறுப்பாகும். இலைகளின் திரள் தழை எனப்படும். இது" இலையுதிர் தழை"யைப் போன்றது. [2][3] இலைகள், தண்டு, மலர், பழம் கூடிய தொகுப்பு தண்டுத்தொகுதி அல்லது தளிர் எனப்படும்.[4] பெரும்பாலான இலைகளில், வேலிக்கால் இடைத்திசு முதன்மை ஒளிச்சேர்க்கைத் திசுவாகச் செயல்படுகிறது. இது இலையலகின் மேல்தளத்தில் அமைந்துள்ளது.[1] ஆனால், இயூகாலிப்ட்டசு போன்ற சில தாவர இனங்களில்,[5] வேலிக்கால் இடைத்திசு மேல், கீழ் இருதளங்களிலும் அமைந்திருக்கும். இது போன்ற இலைகள் சம இருதள இலைகள் எனப்படுகின்றன. பெரும்பாலான இலைகள் தட்டயானவை; தெளிவான அச்சுநோக்கிய மேல் தளமும் அச்சுவிலகிய கீழ்த்தளமும் கொண்டுள்ளன; இத்தளங்கள் நிறத்திலும், மயிரிழையிலும், இலைத்துளை (மூச்சுயிர்ப்புப் புரைகள்) எண்ணிக்கையிலும் புறத்தோல் மெழுகின் அளவிலும் கட்டமைப்பிலும் இன்னும் சில கூறுபாடுகளிலும் வேறுபடும். இலைகல் தன்னுள் பச்சையத்தைக் கொண்டுள்ளதால், பெரும்பாலும் பச்சை நிறத்தில் அமையும். இந்தப் பச்சையம் சூரிய ஒளியை உட்கவர்வதால் ஒளிச்சேர்க்கை நிகழ இன்றியமையாதது. வெள்ளை நிறமுள்ள அல்லது வெள்ளைத் திட்டுகள் அல்லது விளிம்புகள் உள்ள இலை வேற்றுருவ இலை எனப்படும்.
இலைகள் பல்வேறு உருவங்களிலும் அளவுகளிலும் யாப்பிலும் வண்ணங்களிலும் இருக்கலாம். புக்கும் தாவரங்களின் சிக்கல்லன்ன நரம்பமைவோடு கூடிய அகன்ற, தட்டையான இலைகள் பேரிலைகள் எனப்படும். பெரும்பாலும் அகன்ற இலைகளைக் கொண்ட தாவர இனங்கள் பேரிலைத் தாவரங்கள் எனப்படுகின்றன, இந்த பேரிலைத் தாவரங்களில், பல்வேறு படிமலர்ச்சிவழி தோற்றங்களைக் கொண்ட அஃகு பூவாத தாவரங்களும் பெரணிவகைகளும் இலைக்கோபோடுகளும் அடங்கும். ஒரே ஒரு தனி நரம்பு மட்டும் உள்ள எளிய இலைகள் நுண்ணிலைகள் எனப்படுகின்றன.[6] கிழங்கூ போன்ற சில இலைகள் தரைக்கு மேல் அமைவதில்லை. பல நீர்த் தவர இனங்களில் இலைகள் நீரில் அமிழ்ந்துள்ளன. பாலிலைத் தாவர இனங்களின் இலைகள் தடித்தும் சாறுடனும் அமைகின்றன.இவற்றில் மாற்றிலைகள், முட்கள், நாண்கள், ஊமுட்கள் போன்ற சில இலைமாற்றுகள் ஒளிச்சேர்க்கையில் ஈடுபடாமல்,முதிர்ந்ததும் இறந்துவிடுகின்றன. மேலும் சாற்றுக்குழல் தாவரங்களில் உள்ள பல இலைவடிவ கட்டமைப்பு வகைகள் முழுமையாக இலைகளை ஒத்தமைவதில்லை. காட்டாக, மட்டைகள் எனப்படும் தாவரத் தண்டுகள் தடித்த தட்டையான கட்டைகளைப் போல அமைகின்றன. சில தடித்த தட்டையான இலைக்காம்புகளும் கட்டமைப்பிலும் தோற்றத்திலும் இலைகளிலிருந்து வேறுபடுகின்றன.[3][7] மாறாக, சாற்றுக்குழல் இல்லாத தாவரங்களின் இலையொத்த கட்டமைப்புகள், பார்வையிலும் செயலிலும் இலைகளைப் போலவே செயல்படுகின்றன. எடுத்துகாட்டுகளாக, தாள் பாசடை, குமிழ் அல்லது படலப் பாசடைகளின் இலைச்செதில்களைக் கூறலாம்.