இறகற்ற சாணி வண்டு
பூச்சி இனம் / From Wikipedia, the free encyclopedia
இறகற்ற சாணி வண்டு (Flightless dung beetle)(சிர்செலியம் பச்சாசு) என்பது தென்னாப்பிரிக்காவின் சில பகுதிகள் மட்டும் காணப்படும் அகணிய உயிரி ஆகும். இந்த வகை சாணி வண்டு அடோ யானை தேசிய பூங்கா, அமகாலா கேம் ரிசர்வ் மற்றும் எருமை பள்ளத்தாக்கு விளையாட்டு பண்ணை ஆகியவை அடங்கும்.[1] இது சிர்செலியம் பேரினத்தில் உள்ள ஒரே சிற்றினமாகும்.[2] பறக்க இயலாத இந்த வண்டின் இறக்கை மூடிக்குக் கீழே உள்ள வெற்று இடத்தை கார்பனீராக்சைடு சேமிப்பு பகுதியாகப் பயன்படுத்துகிறது. இது ஒரு தனித்துவமான சுவாச பொறிமுறையை உருவாக்குகிறது. இது நீரைப் பாதுகாக்கிறது. இது வறண்ட பகுதிகளில் வாழும் தகவமைப்பாக உள்ளது.[2][3][4]
இறகற்ற சாணி வண்டு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | இசுகராபைடே |
பேரினம்: | சிர்செலியம் |
இனம்: | சி. பச்சாசு |
இருசொற் பெயரீடு | |
சிர்செலியம் பச்சாசு பேப்ரியேசு, 1781 | |
இந்த சிற்றினம் முதலில் தென்னாப்பிரிக்காவில் பரவலாகக் காணப்பட்டது, ஆனால் இது தற்பொழுது குறிப்பிட சில பகுதிகளில் மட்டுமே வாழ்கிறது. எனவே, இது ஒரு பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் பாதிக்கப்படக்கூடிய இனத் தகுதி பெறுகிறது. விவசாயம் மற்றும் மனித நடவடிக்கைகளால் இதன் வாழ்விடங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன. குறைந்த இனப்பெருக்க திறன் மற்றும் குறைந்த சிதறல் (பறக்காமல் இருப்பதன் விளைவாக) இதன் உயிர்வாழ்வு பல காரணிகளின் தாக்கத்திற்கு உள்ளாகிறது. இதன் எண்ணிக்கை பல முதுகெலும்பு விலங்குகளை (குறிப்பாக யானை மற்றும் எருமை) சார்ந்துள்ளது.[1]
பறக்க இயலா சாணி வண்டுகள் பெரும்பாலும் யானை அல்லது எருமைச் சாணியினை உண்கின்றன. ஆனால் இவை முயல்கள், வாலிலாக் குரங்குகள், மிருகங்கள் மற்றும் தீக்கோழிகள் போன்ற பிற இனங்களின் சாணத்தையும் உண்பதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.[1]