இரைகௌவல்
From Wikipedia, the free encyclopedia
இரைகௌவல் என்பது மற்றைய விலங்குகளைக் கொன்று உண்ணும் விலங்கான இரைகௌவி விலங்குக்கும் இரையாகும் விலங்குக்கும் இடையிலான உயிரியல் இடைத் தொடர்பு ஆகும். இது அங்கிகள் காட்டும் ஒரு போசணைமுறை ஆகும். போசணை முறைகளில் ஒட்டுண்ணி மற்றும் நுண் இரைகௌவல் முறை ( இங்கு விருந்து வழங்கி கொல்லப்பட மாட்டாது) மற்றும் ஒட்டுண்ணிப்போலி ( விருந்து வழங்கி இங்கு இறுதியில் கொல்லப்படும்) என்பனவும் அடங்கும். இரைகௌவல் தோட்டி விலங்குகளில் இருந்தும் வேறுபட்டது. தொட்டி விலங்குகள் இறந்த விலங்குகளை உண்பவை. இரைகௌவி விலங்குகள் பல தோட்டி விலங்குகளாக உணவு முறையை கொண்டிருப்பினும் இவை இரண்டும் வேறுபட்டவை.
இரைகௌவி விலங்குகள் செயற்றிறனுடன் தமது இரையைத் தேடும், அல்லது இரைக்காகக் காத்திருக்கும். இரை கண்டடையப்பட்டதும் உடனடியாக அதனைத் தாக்கும் அல்லது அணுகும். இது மறைந்திருந்து இரைகௌவுதல் மற்றும் பின்தொடர்ந்து இரைகௌவல் முறைகளைக் கையாளும். இரை வேட்டையாடப்பட்டதும் இரைகௌவி அதனைக் கொல்லும். தேவையற்ற பாகங்களை நீக்கிவிட்டு உண்ணும்.