இராபர்ட்டு புரூசு
From Wikipedia, the free encyclopedia
முதலாம் இராபர்ட்டு (Robert I, 11 சூலை 1274 – 7 சூன் 1329), பரவலாக இராபர்ட்டு புரூசு (Robert the Bruce, பண்டைய கேலிக்: Roibert a Briuis; தற்கால இசுக்காத்திய கேலிக்: Raibeart Bruis; நார்மன் பிரான்சியம்: Robert de Brus அல்லது Robert de Bruys) 1306இலிருந்து 1329இல் தனது மரணம் வரை இசுகாத்திய அரசராக இருந்தவர். அவரது தலைமுறையில் மிகச் சிறந்த போர்வீரராகத் திகழ்ந்த இராபர்ட்டு இங்கிலாந்திற்கு எதிரான முதல் விடுதலைப் போரை நடத்தியவர். இசுக்கொட்லாந்து ஓர் தன்னாட்சி பெற்ற நாடாக மீட்பதற்கு போராடி வெற்றி கண்டார்; இன்றும் இவர் இசுக்கொட்லாந்தின் தேசிய நாயகராக கருதப்படுகின்றார்.
விரைவான உண்மைகள் முதலாம் இராபர்ட்டு Robert I, இசுக்காத்திய அரசர் ...
முதலாம் இராபர்ட்டு Robert I | |
---|---|
புரூசின் விக்டோரியாக் காலத்து ஓவியம் | |
இசுக்காத்திய அரசர் | |
ஆட்சிக்காலம் | 25 மார்ச் 1306 – 7 சூன் 1329 |
முடிசூட்டுதல் | 15 திசம்பர் 1299 |
முன்னையவர் | ஜான் |
பின்னையவர் | இரண்டாம் டேவிட் |
பிறப்பு | (1274-07-11)11 சூலை 1274 டர்ன்பெரி கோட்டை, ஐர்சையர்[1] |
இறப்பு | 7 சூன் 1329(1329-06-07) (அகவை 54) கார்ட்ராசு பிரபுமனை |
புதைத்த இடம் | டன்பெர்ம்லைன் மடம் (உடல்) – மெல்ரோசு மடம் (இதயம்) |
வாழ்க்கைத் துணைகள் |
|
குழந்தைகளின் #Issue |
|
மரபு | புரூசு அரசவம்சம் |
தந்தை | புரூசின் இராபர்ட்டு |
தாய் | மர்ஜோரி |
மதம் | கத்தோலிக்க திருச்சபை |
மூடு