இயேசுவின் திரு இதயம்
From Wikipedia, the free encyclopedia
இயேசுவின் திரு இதயம் அல்லது இயேசுவின் மிகத் தூய இதயம் என்பது இயேசு கிறித்துவின் தூய இயல்பையும் அன்பையும் சுட்டிக்காட்டும் கருத்துரு ஆகும்.[1] மூவொரு இறைவனின் திட்டத்திலும், மனிதகுல மீட்பிலும் இயேசுவின் ஆவல் மற்றும் கையளிப்பை தியானிக்க உதவும் ஒரு பக்தி முயற்சியாக இது விளங்குகிறது. கத்தோலிக்க திருச்சபையில் மிகவும் புகழ்பெற்ற பக்தி முயற்சியாக இது விளங்குகிறது. பெந்தக்கோஸ்து பெருவிழாவுக்கு 19 நாட்கள் கழித்து வரும் வெள்ளிக்கிழமை இயேசுவின் திரு இதயத்துக்கு பெருவிழா கொண்டாடப்படுகிறது.
விரைவான உண்மைகள் இயேசுவின் திரு இதயம், ஏற்கும் சபை/சமயங்கள் ...
இயேசுவின் திரு இதயம் | |
---|---|
இயேசுவின் திரு இதயத்தை சித்தரிக்கும் ஓவியம் | |
ஏற்கும் சபை/சமயங்கள் | கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம், லூதரனியம் |
திருவிழா | பெந்தக்கோஸ்து பெருவிழாவுக்கு 19 நாட்கள் பிறகு (வெள்ளிக்கிழமை) |
சித்தரிக்கப்படும் வகை | பற்றியெரியும் தீயுடன் கூடிய முள்முடி சூழ்ந்த இதயம் |
பாதுகாவல் | செப அப்போஸ்தலர் |
மூடு