இயேசுவின் கன்னிப்பிறப்பு
From Wikipedia, the free encyclopedia
மரியாள் கன்னியாக இருக்கும் போதே, ஆண் துணை எதுவுமின்றி, தூய ஆவியின் வல்லமையால் இயேசுவை கருத்தரித்து, ஈன்றளித்தார் என்னும் சமய நம்பிக்கை இயேசுவின் கன்னிப்பிறப்பு என்று அழைக்கப்படுகிறது.[1] கிறித்தவ சமயத்துக்கு அடிப்படையான இக்கொள்கையை இசுலாம் சமயமும் ஏற்கிறது. முதல் நூற்றாண்டில் எழுதப்பட்ட மத்தேயு, லூக்கா நற்செய்திகள் இயேசுவின் கன்னிப்பிறப்பைப் பற்றி தெளிவாக எடுத்துரைக்கின்றன. தொடக்க காலம் முதலே கிறிஸ்தவர்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இயேசுவின் கன்னிப்பிறப்பு[2] கிறிஸ்தவத்தில் பொதுவாக பயன்படுத்தப்படும் இரண்டு நம்பிக்கை அறிக்கைகளிலும் இணைக்கப்பட்டுள்ளது.