இந்திய வான்படை
இந்திய வான்படை உலகில் நான்காவது பெரிய வான்படை. / From Wikipedia, the free encyclopedia
இந்திய வான்படை அல்லது இந்திய விமானப் படை (Devanāgarī: भारतीय वायु सेना; Indian Air Force) இந்தியப் பாதுகாப்பு படைகளின் ஒரு அங்கமாகும். இந்தியாவின் வான் எல்லையை பாதுகாப்பதே இதன் தலையாய கடமையாகும். இது இந்தியாவை எதிரிகளின் வான்வழித் தாக்குதலில் இருந்து பாதுகாத்தலையும், வான்வழித் தாக்குதலை முன்னின்று நடத்துதலையும் குறிக்கோளாகக் கொண்டது.
இந்திய வான்படை Indian Air Force | |
---|---|
உருவாக்கம் | 26 சனவரி 1950; 74 ஆண்டுகள் முன்னர் (1950-01-26) (இந்திய வான்படையாக)
8 அக்டோபர் 1932; 91 ஆண்டுகள் முன்னர் (1932-10-08) |
நாடு | இந்தியா |
வகை | வான்படை |
பொறுப்பு | வான்வழிப் போர் |
அளவு | 170,576 செயல் வீரர்கள்[1] 140,000 இருப்பு வீரர்கள்[2] 1926+ வானூர்திகள்[3][4] |
பகுதி | இந்தியப் பாதுகாப்புப் படைகள் |
தலைமையகம் | ஒருங்கிணைந்த பாதுகாப்பு தலைமையகம், பாதுகாப்பு அமைச்சகம், புது டெல்லி |
குறிக்கோள்(கள்) | Nabhaḥ Spr̥śaṁ Dīptam ("விண்ணைத் தொடும் மகிமை")[5][6][7] (பகவத் கீதையிலிருந்து எடுக்கப்பட்டது)[8] |
நிறம் | |
ஆண்டு விழாக்கள் | 8 அக்டோபர் (வான்படை தினம்)[9][10] |
சண்டைகள் | குறிப்பிடத்தக்க செயல்பாடுகள் |
இணையதளம் | indianairforce |
படைத்துறைச் சின்னங்கள் | |
சிறுவட்டு | |
துடுப்பு சின்னம் | |
கொடி |
இந்திய வான்படை 1932ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் நாள், இந்தியாவை ஆண்ட பிரித்தானியர்களால் உருவாக்கப்பட்டது. தற்பொழுது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8 ஆம் தேதி இந்திய வான்படை நாள் கொண்டாடப்படுகிறது. இந்திய விடுதலைக்கு பின் இந்தியப் பாதுகாப்பு படையின் ஒரு பிரிவானது.
இப்படைக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் முதற் பெரும் படைத்தலைவர் ஆவார். இந்திய வான்படையின் நிறுவன அமைப்பின் தலைவராக ஒரு வான்படைப் பணியாளர்களின் முதன்மை அதிகாரி (Chief of Air Staff) நியமிக்கப்படுகிறார். இந்திய வான்படை ஏறத்தாழ 170,000 வீரர்களைக் கொண்டுள்ளது. ஏறத்தாழ 1,130 போர்விமானங்களும் 1,700 மற்ற பயன்பாட்டு விமானங்களும் கொண்டுள்ள இந்திய வான்படை உலகில் நான்காவது பெரிய வான்படையாகத் திகழ்கிறது.