இந்திய அஞ்சல் துறை
From Wikipedia, the free encyclopedia
இந்திய அஞ்சல் துறை 'இந்தியா போஸ்ட்' (India Post) என்ற பெயரில் செயல்படுகிறது. இது இந்திய அரசினால் செயல்படுத்தப்படும் அஞ்சல் சேவை ஆகும். இது பல வழிகளில் மக்களுக்குச் சேவை செய்து வருகிறது. நாள் ஒன்றுக்கு இரண்டு இலட்சம் கடிதங்கள் பட்டுவாடா செய்யப்படுகின்றன. நாட்டின் எந்த இடத்திலிருந்தும் எந்த இடத்திற்கும் அதிகபட்சமாக நான்கு நாட்களுக்குள் கடிதங்கள் பட்டுவாடா செய்யப்படுகிறது.
இந்திய அஞ்சல் துறை சின்னம் | |
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 1 அக்டோபர் 1854; 169 ஆண்டுகள் முன்னர் (1854-10-01)[1][2] |
தலைமையகம் | தாக் பவன், சன்சத் வீதி, புது தில்லி |
பணியாட்கள் | 416,083 (மார்ச் 2021)[3] |
ஆண்டு நிதி | ₹20,820.02 கோடி (US$2.6 பில்லியன்) (2022–23)[4] |
அமைச்சர் |
|
துறை தலைமைகள் |
|
மூல துறை | அஞ்சல் துறை, தகவல் தொடர்பு துறை அமைச்சகம், இந்திய அரசு |
கீழ் துறை | |
முக்கிய ஆவணம் | |
வலைத்தளம் | www |
இந்திய அஞ்சல்துறை மொத்தம் 154,000 அஞ்சல் அலுவலகங்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய துறையாகும் (சீனா இரண்டாவது இடம், 57,000 தபால் அலுவகங்கள்). இதன் பரந்து விரிந்த அலுவலகங்களால் இந்தியாவின் அனைத்து இடங்களும் இணைக்கப்படுகின்றன. இந்திய அஞ்சல் துறையில் மொத்தம் 593,878 (2001ம் வருடத்தின் படி) ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். இந்திய அஞ்சல் துறை சிறிய வகை வங்கி சேவைகளிலும் ஈடுபடுகிறது. இதன் மூலம் வங்கி வசதி இல்லாத கிராமங்களும் பயன்பெறுகின்றன. 21 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு, சுமார் 6000 நபர்களுக்கு ஒரு அஞ்சல் அலுவலகம் என்ற விகிதத்தில் இது உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 10,264 அஞ்சலகங்கள் உள்ளன.