இடச்சு இந்தியா
From Wikipedia, the free encyclopedia
டச்சு இந்தியா (Dutch India), (ஆட்சிக் காலம்:1605 – 1825), நெதர்லாந்து நாடு, 1605 முதல் கிழக்கிந்திய டச்சு கம்பெனியை துவக்கி, இந்தியாவில் உள்ள கடற்கரை பகுதிகளை இந்திய மன்னர்களிடமிருந்து கைப்பற்றி, கோட்டை கொத்தளங்கள் மற்றும் குடியிருப்புகளை அமைத்து இந்தியாவில் 1605 முதல் 1825 முடிய வணிகம் செய்தனர்.
1824இல் ஏற்பட்ட ஆங்கிலேய-டச்சு உடன்படிக்கையின்படி, டச்சுக்காரர்கள் இந்தியாவில் தாங்கள் வணிகம் செய்த பகுதிகளை கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்களிடம் விட்டுக் கொடுத்து, மார்ச் 1825இல் இந்தியாவை விட்டு வெளியேறினர்.[1] [2]