இங்கிலாந்தின் ஜான்
From Wikipedia, the free encyclopedia
ஜான் (John, திசம்பர் 24, 1166 – அக்டோபர் 19, 1216), என்றும் ஜான் லாக்லாந்து (நார்மன் பிரான்சியம்: Johan sanz Terre),[1] அறியப்படும் 1199 முதல் தமது இறப்பு 1216 வரை இங்கிலாந்தின் அரசராக இருந்தவர். தனது அண்ணன் முதலாம் ரிச்சார்டின் ('ரிச்சர்டு இலயன்ஆர்ட்') மரணத்திற்குப் பின்னர் இங்கிலாந்தின் அரசரானார்.
ஜான் | |
---|---|
அரசர் ஜானின் கல்லறை சிற்பம், வொர்செஸ்டர் கதீட்ரல் | |
இங்கிலாந்தின் அரசர் | |
ஆட்சிக்காலம் | மே 27, 1199 – அக்டோபர் 19, 1216 |
முடிசூட்டுதல் | மே 27, 1199 |
முன்னையவர் | இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் |
பின்னையவர் | என்றி III |
அயர்லாந்துப் பிரபு | |
ஆட்சிக்காலம் | மே 1177 – அக்டோபர்19, 1216 |
பின்னையவர் | என்றி III |
பிறப்பு | திசம்பர் 24, 1166 பியூமோன்ட் அரண்மனை, ஆக்சுபோர்டு |
இறப்பு | அக்டோபர் 19, 1216 (அகவை 49) நெவார்க் கோட்டை, நாட்டிங்காம்சையர் |
புதைத்த இடம் | வொர்செஸ்டர் பேராலயம் |
துணைவர் | இசபெல்லா, குளோசெஸ்டர் சீமாட்டி (தி. 1189; ann. 1199) இசபெல்லா, அங்கூலெமெ சீமாட்டி (தி. 1200) |
குழந்தைகளின் பெயர்கள் | என்றி III, இங்கிலாந்து அரசர் ரிச்சர்டு ஜோன் இசபெல்லா எலெனார் முறைகேடான: ரிச்சர்டு பிட்சுராய் ஜோன் |
மரபு | பிளான்டஜென் அரசமரபு/ஆங்கவென்[nb 1] |
தந்தை | இங்கிலாந்தின் இரண்டாம் என்றி |
தாய் | எலெனார் |
இவரது ஆட்சியில் இவருக்கும் நிலப்பிரபுக்களுக்கும் ஆயர்களுக்கும் இடையே பல பிணக்குகள் எழுந்தன. இதனால் அவர்கள் புரட்சி செய்து அரசரின் அதிகாரத்தை மட்டுப்படுத்தும் மாக்னா கார்ட்டாவில் கையொப்பமிட வைத்தனர். இந்த மாக்னா கார்ட்டா இங்கிலாந்தின் வரலாற்றில் மிக குறிப்பிடத்தக்க சட்ட ஆவணமாகும். இதுவே இங்கிலாந்தின் முதல் உரிமைகள் சட்டமும் ஆகும். இந்த ஆவணம் அரசர்களின் உரிமைகளை மட்டுப்படுத்தியதோடு அவற்றை செயல்படுத்த சில சட்டங்களைப் பின்பற்றுவதைக் கட்டாயமாக்கியது. பிரபுக்களுக்கு அரசாட்சியில் கூடுதல் அதிகாரத்தை வழங்கியது. இது இங்கிலாந்து அரசை மட்டுமல்லாது மற்ற நாட்டு அரசுகளையும் பாதித்தது.[2]
ஜான் இங்கிலாந்து அரசராக இருந்தது இங்கிலாந்தின் வரலாற்றுப் பார்வையில் வெற்றிகரமானது ஒன்றல்ல. நார்மண்டி சிற்றரசை பிரான்சின் இரண்டாம் பிலிப்பிடம் தோற்றார்; இதனால் இவரது அரசமரபான ஆங்கவென் பேரரசு வீழ்ச்சியடையத் தொடங்கியது. 13ஆம் நூற்றாண்டில் கேப்டியன் பரம்பரை அதிகாரத்தைக் கைப்பற்றவும் வழி வகுத்தது. பலமுறை முயன்றும் அவரால் பிரான்சிடமிருந்து இழந்த நிலப்பகுதியை மீட்க இயலவில்லை.