ஆப்பிரிக்காவின் பெரு நதிகள்
From Wikipedia, the free encyclopedia
ஆப்பிரிக்காவின் பெரு நதிகள் (சுவாகிலி - மாசிவா மாக்கு) என்பது வரிசையாக நதிகள் இணைந்து கிழக்கு ஆப்பிரிக்க பிளவு பகுதியில் காணப்படும் பிளவு பள்ளத்தாக்கு நதிகளின் ஒரு பாகத்தை உருவாக்குகிறது. இவற்றுள் பரப்பில் உலகின் மூன்றாவது பெரிய நன்னீர் ஏரியான விக்டோரியா ஏரி, ஆழத்திலும் கன அளவிலும் உலகின் இரண்டாவது பெரிய நன்னீர் ஏரியான டான்ஜானிகா ஏரி, பரப்பளவில் உலகின் எட்டாவது பெரிய நன்னீர் ஏரியான மாலாவி முதலியன அடங்கும்.[1] இவற்றின் மொத்த கன அளவு 31,000 கி. மீ ³ (1700 மில்லி கன அடி) ஆகும், இது பைக்கால் ஏரி அல்லது வட அமெரிக்க பெரு ஏரிகளை விட அதிகம் ஆகும். இது நமது கோளின் மேற்பரப்பில் உறையாத நீரின் 25% ஆகும். ஆப்பிரிக்காவின் பெரும் பிளவு ஏரிகள் முந்தைய அல்லது பழைய கால சுற்று சூழலின் தாயகமாகும். உலகின் மொத்த மீன் இனங்களில் 10% இங்கு வசிக்கின்றன. புருண்டி, காங்கோ சனநாயக குடியரசு, கென்யா, மாலவி, ருவாண்டா, டான்செனியா மற்றும் உகண்டா போன்ற நாடுகள் ஆப்பிரிக்க பெரு ஏரி பகுதியில் உள்ளன.[2]